வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

இந்தியாவில் சாதி நிலைப்புக்கான காரணம் எ‌ன்ன? - ஆசிரியர் திரு.லெனின்

பொதுஉடமைக்காரர்கள் சார்பில் நான் :

இந்தியாவில் சாதிமுறை எவ்வாறு தோன்றியது அது தொடரக் காரணமென்ன?

இந்தியாவில்,ஐரோப்பாவைப் போன்று அரசர் காலத்தில் நிலங்கள் வில்லங்கமில்லா பட்டா நிலங்களாக நிலப்பிரபுகளுக்கு சொந்தமாக இல்லை.அதாவது நிலத்தில் நிலப்பிரபுத்துவ நில உடைமை முறை தோன்றவில்லை. அவ்வாறு தோன்றியிருந்தால்,ஐரோப்பாவை போன்று இங்கும் நிலப்பிரபு பண்ணையடிமை என்ற இரு எதிர்எதிர் வர்க்கங்களே தோன்றியிருக்கும். சாதிமுறை தோன்றயிருக்க வாய்ப்பில்லை.

இவ்வாறு இந்தியாவின் தனித்தன்மைக்கு ஏற்ப சிக்கலான தேங்கிய சமூக நில உடைமை முறை நீண்ட காலம் தொடர்ந்தது. இதன் விளைவாய்

1.சுயதேவைக்கிராமங்கள்
2.குலத்தொழில் (இதன் தேவையிலிருந்து)
3.அகமணமுறை
4.சாதிமுறை
5.சாதி குடியிருப்புகள்
6.சாதி பண்பாட்டு உளவியல்

ஆகியவைகள் தோன்றின.

இவைகளும் ஒன்றாக சேர்ந்து,குறிப்பிட்ட எல்லைக்குள் வாழும்,ஒருமொழி பேசுவோர்,ஒரு தேசிய இனஉணர்வைப் பெறுவதில்,இனமாக உருவாவதிலும் ஒரு தடைக்கல்லாக இருந்து வருகிறது.

ஒவ்வொரு வர்க்கசமுதாயமும் (ஆண்டான்_அடிமை.
நிலபிரபு_பண்னையடிமைமுறை.
முதலாளி_தொழிலாளி.
தனியுடைமையற்ற சோசலிச சமுதாயம்.)
ஒரு குறிபிட்ட பொருளியல் உற்பத்தி முறையின் வெளிப்பாடே ஆகும்.எனவே அந்த குறிப்பிட்ட உற்பத்தி வளர்ச்சிமுறையில் அல்லது தேங்கிய நிலையில்,ஏற்படும் எந்த ஒரு தனித்தன்மையும்,சமுதாய வாழ்க்கை முறையிலும் (உற்பத்தி உறவுகளிலும்) தனித்தன்மையை உருவாக்கவே செய்யும்.

சாதியின் தோற்றத்திற்கும்,நிலைப்புக்குமான மேற்கண்ட ஆறுகாரணங்களில்,ஆட்சியாளர்களின் (அந்நிய ஏகாதிபத்தியம்,அவர்களின் உள்நாட்டுத் தரகர்கள்,மற்றும் கிராமப்புற நிலபிரபுத்துவ ஆதிக்க சக்திகள்)
சுரண்டல் ஆதிக்கநலனில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்ட மூலதனம்,தொழில்நுட்பம்,இயந்திரங்கள் மூலம் உற்பத்திசக்திகளில் ஏற்பட்ட வளர்ச்சியின் விளைவாய்

1.சுயதேவைக் கிராமங்கள்
2.குலத்தொழில் ஆகியவை மட்டும் மங்கி மறைந்துள்ளன.

ஆனால் அந்நிய சுரண்டல்காரர்களுக்கும் அவர்களின் உள்நாட்டு தரகர்களுக்கும் கிராமப்புற ஆதிக்ககாரர்களுக்கும் சாதியின் தோற்றத்திற்கும் நிலைப்புக்குமான மேற்கண்ட ஆறு காரணங்களையும் ஒழிக்கவேண்டிய அவசியமில்லை சமுதாயத்தில் ஒரு அடிப்படைமாற்றத்தையும் உருவாக்கவேண்டிய அவசியமும் இல்லை.

இதனால் இன்றும் சாதியின் நிலைப்புக்கான கீழ்கானும் 4 சமூகக்காரணங்கள்.
1.சாதிமுறை
2.சாதிக்குடியிருப்புகள்
3.அகமணமுறை
4.சாதியப்பண்பாட்டு உளவியல்

தொடர்கின்றன.அழிந்துவிட்ட சுயதேவைக்கிராமங்கள் குலதொழில் ஆகியவற்றின் இடத்தை பல்வேறு வழிகளில் சாதிக்கட்சிகள் நிரப்பிக்கொண்டன. கூடவே சாதியை பயன்படுத்தும் கட்சிகளும் ஆட்சியாளர்களாலும  இவைகள் பாதுகாக்கப்படுகின்றன.

எனவே சாதிக்கும் சாதிமோதலுக்குமான சமூகக் காரணங்களில் பெரும்பான்மையானவை தொடர்வதால் ஒரு அடிப்படை சமூக மாற்றமின்றி சாதிக்கு முடிவு கட்டுவது என்பது ஒரு பகற்கனவே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக