வியாழன், 25 பிப்ரவரி, 2016

தமிழகத்தை சீரழிக்கும் முப்பெரும் அபாயங்கள் - சேர்ந்த.சிவகுரு

இன்றையக் கண்ணோட்டம்-(258)
            *************************
#தமிழகத்தைச்_சீரழிக்கும்
             #முப்பெரும்_அபாயங்கள்

1.RSS &சங்கபரிவார்
2.ஜெயாவின் மாபியா கும்பல்
3.நாம் தமிழர் கட்சி.

ஏற்கெனவே இரண்டு அபாயத்தால் சின்னாபின்னாகிக் கொண்டிருந்த தமிழகம் இப்போது நாம் தமிழர் கட்சி என்கிற இனவாதக் கட்சியால் மக்கள்  மேலும் பிளவுபட்டு வர்க்க ஒற்றமை சீர் குலைகிறது.

எதிரிகளின் நோக்கமும் இதுதானே.

பெரியாருக்குப் பிறகு தைரியமாக நேர்மையாக பகுத்தறிவு பிரச்சாரத்தை செய்வதற்கு ஆளில்லாததாலும்

கம்யூனிஸ்ட்களின் பலவீனத்தாலும்

வலதுசாரிகள் 40ஆண்டுகளாக மெல்லமெல்ல நெருக்கி இப்போது வெளிப்படையாகவே இந்துமதவெறியைக் கக்குகிறார்கள்.

ஜாதியை,மதத்தை, பிற்போக்கு மூடக்கலாச்சாரத்தை திட்டமிட்டு பரப்பி மீண்டும் பார்ப்பனர்களின் பொற்காலத்தை கொண்டுவர முயற்சிக்கிறார்கள்

இதை செயல்படுத்திக் கொண்டே அதன் மறைவில் ஏகாதிபத்தியத்தை நாட்டில் காலூன்ற வைப்பதும் தீவிரமாக நடக்கிறது.

அதே போல ஜாதியை இனவெறியை மூடநம்பிக்கையை தூண்டி விடுவதில் நாம்தமிழர் கட்சிக்கும் RSSக்கும் எந்த வித்தியாசமுமில்லை.

RSSகாரன் முஸ்லீமை விரட்டனும் என்கிறான் சீமான் கும்பலோ 'தமிழரல்லாத'மொழிச்சிறுபான்மையினரை விரட்டத் துடிக்கிறார்கள்.

அவர்கள் இல்லாத கற்பிதமான இந்துமதத்தின் அடிப்படையில் பாசிசத்தைக் கொண்டுவர முயல்கின்றனர்

இவர்களோ தமிழர் மதம்,ஆசீவகம், முப்பாட்டன் முருகனென காலாவதியான பிற்போக்கான கலாச்சாரத்கை மீட்க துவேசத்தைக் கிளப்புகிறார்கள்.

RSSகாரனோ முஸ்லீமை வந்தேறி என்கிறான் தமிழக RSS சீமான் கும்பலோ வடுக வந்தேறிகள் என்கிறார்கள்.

இந்துமதத்துக்குக் கட்டுபட்டு வாழ்வதாக இருந்தால் முஸ்லீம்கள் இந்தியாவிலிருக்கலாமென திமிர் பேச்சுப் பேசுகிறார்கள்.

இவர்களோ நீங்கள் வாழலாம்
நாங்கள்தான் ஆள்வோமென பாசிசத் தனமாகப் பேசுகிறார்கள்.

அதாவது இரண்டாந்தர குடிமக்களாக வாழப் பிச்சைச்சலுகை தருவார்களாம்
அதை சுயமரியாதை இல்லாமல் கேட்டு மற்றவர்கள் வாழ வேண்டுமாம்.

அவர்களும் கிராமப் பூசாரி மாநாடு நடத்தி பார்ப்பனீயமயமாக்கப் பார்க்கிறார்கள்.

இவர்களும் கிராமப் பூசாரி மாநாட்டை நடத்தி பிற்போக்கை வளர்க்கிறார்கள்.

எல்லா மதஇன வெறியர்களையும் போல் இவர்களும் வரலாற்றைத் திரிக்கிறார்கள், மறைக்கிறார்கள்

இருவருமே பேசமுடியாவிட்டால் விவாதத்தை நிறுத்திவிட்டு கெட்ட வார்த்தையால் திட்டத் தொடங்குவார்கள்.

இருவருமே அதிகாரத்திலிருப்பவரை
அண்டிப் பிழைத்து வாழ்பவர்கள்.
காலை நக்கத்தயங்காதவர்கள்

இருவருமே சட்டவிரோத கட்டப்பஞ்சாயத்துக்காரர்கள்
கலாச்சார குண்டர்கள்.

இருவருக்குமே பொருளாதார கொள்கை கிடையாது. நடைமுறையிலுள்ள முதலாளித்துவ சமூகத்தைக் காப்பதுதான் இவர்களது பொருளாதாரக் கொள்கை.

இரண்டு பாசிசத்துக்குமே இரட்டை நாக்குதான். இரண்டிலுமே உள்கட்சி ஜனநாயகம் கிடையாது.

RSSவெள்ளை ஏகாதிபத்தியத்தின் வளர்ப்புநாய் காலனியாதிக்கத்தை காக்கும் கள்ள வாரிசுகள்.

நாம்தமிழர் கட்சியோ ரா & தமிழக உளவுத்துறையால் வளர்க்கப் படும் வளர்ப்பு நாய்கள்.

உளவுத்துறையின் பிரிவினை திட்டம் 2வகையாக இருக்கும்
அவர்கள் சம்மதத்துடன் திட்டமிட்டு நேரடியாக நிதியுதவியைப் பெற்று சதி செய்வது, (சுப்ரமணிய சாமி, RSS,NGO)

நமக்கே தெரியாமல் நம்மை வேறு ஆள்களை வைத்து காரியத்தை சாதித்துக் கொள்வார்கள் ஒருகட்டத்தில் இவர்களுக்கு தெரியவந்தாலும் தெரியாதது மாதிரியே நடப்பார்கள்.

விடுதலைப்புலிகள், IS,தாலிபான்,
அண்ணாத்துரை, மாலிக், சிறீ சேனா,
பிரசண்டா, நாகாப்படை,
நாம் தமிழர் கட்சி இப்படி பல

ஆட்களை கொலை செய்வது, புற்றுநோய் கிருமி மூலம் ஆளைக் கொல்வது, அண்டை நாடுகளில் குண்டு வைப்பது, காஷ்மீர்,நாகா,மணீப்பூர் அசாமில் கருங்காலிகளை உருவாக்குவது, விபத்தின் மூலம் ஆளைக் கொல்வது என படுபயங்கரவாத அமைப்புதான் RAW என்கிற உளவு அமைப்பு.

CIA, RAW,மொசாத் இவர்கள் தலையீடில்லாத ஒரு செயலும் உலகத்திலும் கிடையாது இந்தியாவிலும் கிடையாது.

அது நாம் அறிந்தோ அறியாமலோ அவர்கள் நம்மை இயக்குவார்கள்

கார்ப்பரேட்டுகளின் காலனியாதிக்கம்,
அதை கூட்டிக்கொடுக்கும் பயங்கரவாத இந்திய அரசு, தமிழகத்தை அடிமைப்படுத்தும் இந்திய அரசும், சட்டங்களும், தமிழகத்தில் ஆதிக்க ஜாதி முதலாளிகளும்தான்
தமிழகத்தின் 90%மக்களுக்கு எதிரிகள்.

இதை எதிர்க்காமல்,இதை மாற்றாமல்
தமிழனை தமிழன் ஆண்டாலும் வேறு யார் ஆண்டாலும் விடியல் பிறக்கப் போவதில்லை.

நாம் தமிழர் கும்பலோ,சீமானோ இதை எதிர்த்து ஒரு வார்த்தைகூட பேசுவது கிடையாது.

மாறாக மக்கள் விரோத அரசுக்கெதிராகத் திரளும் மக்களை ஜாதியால் மதத்தால் இனத்தால், மொழியால் பிரிக்க முயல்கின்றனர்.

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை சீர்குலைக்கும் வேலையை RSSகும்பலும், தமிழக RSSசீமான் கும்பலும் திட்டமிட்டு செய்து வருகிறார்கள்.

இந்தியா இல்லாதபோது தமிழ்நாடு உருவாகாத போது 1000ஆண்டுகளாக தென்னிந்தியா முழுவதும் பரவலாக வாழ்ந்து வரும் மக்களை மொழிவழி மாநிலம் பிரிக்கப்பட்ட போது அந்தந்த எல்லைக்குள் அவர்கள் மொழிச் சிறுபான்மையாகி விட்டனர்.

இப்படி தமிழர்களும் கேரளா, கர்நாடகா,ஆந்திராவில் மொழிச் சிறுபான்மையினராக வாழ்ந்து வருகின்றனர்.

அதை அந்தந்த மாநில அரசுகள் மெல்லமெல்ல தத்தமது தேசிய இனமாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

எடுத்துக்காட்டாக பாலக்காடு அட்டப்பாடி பகுதியில் 400கிராமங்களில் தமிழ்பேசும் ஆதிவாசிகளும் தமிழர்களும் வாழ்ந்து வருகின்றனர்
அவர்களை கேரள அரசு மலையாள மொழிக்கல்வி மூலம் அவர்களை மலையாளிகளாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர். அதில் பாதி வெற்றியும் பெற்றுவிட்டனர்.

இங்கும் வீட்டில் கன்னடம் தெலுங்கு பேசி வந்த மக்கள் 3-வது தலைமுறையினர் தமிழ்வழிக்கல்வி மூலம் தெலுங்கு பேசுவதை மறந்து விட்டனர் இப்போது அவர்களை பிரிவினையைத் தூண்டுவதன் மூலம்
ஒற்றுமை சீர்குலைவது மட்டுமல்ல

இதன்பாதிப்பு நீண்டகாலத்துக்கிருக்கும்.
இலங்கையைப் போல உள்நாட்டுப் போரில் சிக்கி வளர்ச்சி முற்றிலும் பாதிக்கப்படும்.

1500ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் தமிழர்களாகத்தான் இருந்தார்கள்

சமஸ்கிருதக் கலப்பால் உருத்திரிந்து புது மொழிகளாக உருவானது.

வெளிமாநிலத்தில் ,வெளிநாட்டில் "வந்தேறியாக"வாழும் தமிழர்கள் என்ன செய்வதெனக் கேட்டால் அவர்கள் அங்கு அடங்கி ஒதுங்கி வாழ வேண்டுமென்கிறார்கள் சீமான் கும்பல்

அதாவது இங்குள்ள 50லட்சம் பிறமொழி பேசுவோரை அடிமையாக்க
வெளிநாட்டில்,வெளிமாநிலத்தில் வாழும் 2கோடி தமிழர்களை பலி கொடுக்கிறார்கள்.

இது 100 ஆண்டுகளானாலும் பிரச்சனைத் தீரப்போவதில்லை.

இவர்கள் "வடுகர்களை வெளியேறச் சொல்லவில்லையே"என்கிறார்கள்.
அடங்கி வாழு என்பது வெளியே போ என்பதைவிட வக்கிரம் பிடித்த நிலைபாடுதான்.

இவர்கள் "வெளியேறச் சொல்லாமல்"இருப்பதுகூட தற்காலிக தந்திரம்தான் .பெரியார் பிறந்த மண்ணாக இருப்பதால்தான் 
கட்சி வலிமையானால் மொழிச்சிறுபான்மையினரைத் தாக்கி விரட்ட முற்படுவார்கள். இது உறுதி.

பகையற்ற முரண்பாடுகளை பகைமுரண்பாடாக ஆக்கி பிரிவினையை வளர்ப்பதைத்தான் RSSம் தமிழக RSSசீமான் கும்பலும் செய்துவருகிறார்கள்.

தமிழர்களை அழிக்கும் பார்ப்பன சதியின் ஒரு பகுதியான ஜெயாவின் ஆட்சி விளங்குகிறது.

அரைடவுசர் போடாத RSSகாரி ஜெயாவும் அதை திறம்பட செய்து வருகிறார்.
கொள்ளையடிப்பது, தான்தோன்றித்தனமான அராஜக ஆட்சி மூலம் நாட்டை சீரழிப்பதைத் தவிர வேறொன்றும் செய்யாவர்தான் இந்த பார்ப்பன ஜெயா.

அரசியல் மாற்றம்,சமத்துவம், சுதந்திரத்துக்காகப் போராடும் முற்போக்கு சக்திகள் இந்த 3கும்பலையும் எதிர்த்துப் போராட வேண்டியிருக்கிறது.

நாம் தமிழர் கட்சி தமிழக RSS.
சீமான் தமிழக பால்தாக்கரே
சீமான் தமிழக ராஜபக்சே.

RSS,பிஜேபி, சிவசேனா, அதிமுகவை கட்சியாகப் பார்க்கக்கூடாதெனச் சொல்லிவந்தோம் இப்போது நாம்தமிழர் கட்சியையும் சேர்க்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இவைகள் ஒழிக்கப்பட வேண்டிய பாசிச சக்திகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக