திங்கள், 15 டிசம்பர், 2014

இந்திய தேசியமும் இந்துத்துவ காட்டுமிராண்டிகளும்



        இந்திய தேசியமும் இந்துத்துவ காட்டுமிராண்டிகளும்

* இந்திய தேசியம் என்பதே இந்து தேசியம் தான்
* பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்.
* ராமர் பிறந்த இடத்தில் அவர் கோயிலை இடித்து கட்டப்பட்டது பாபர் மசூதி.
* துர்க்கையம்மன் கோயில் இருந்த இடத்தில் கட்டப்பட்டது வேளாங்கண்ணி கோயில்.
* மாரியம்மன் கோயில் இருந்த இடத்தில் கட்டப்பட்டது புதுவை சம்பா கோவில்
* சிவன் கோயில் இருந்த இடத்தில் கட்டப்பட்டுள்ளது தாஜ்மகால்
* ராமர் கோயிலை கட்டியே தீருவோம்
* நீங்கள் ராமனின் பிள்ளைகளா? அப்பன் பெயர் தெரியாதவர்களா?
* சமஸ்கிருதம் கட்டாயமாக மத்திய அரசு பள்ளிகளில் கற்பிக்கப்படும்
* திருவள்ளுவர் இந்து தான்.
இன்னும் இப்படியான மதவெறியூட்டும் பேச்சுகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இந்தியா மதச்சார்பற்ற குடியரசு என்று இந்திய அரசியல் சாசனம் வரையறுக்கிறது. ஆனால் மேலே உள்ள பேச்சுகளை பார்த்தால் உங்களூக்கு நியாயமாக சில கேள்விகள் தோன்றுமில்லையா? அவர்கள் அப்படித்தான் என கடந்துபோக இவையொன்றும் பொழுதுபோக்கு விஷயமல்ல. ஒவ்வொரு குடிமகனின் வாழ்வோடும், ஏன் அவனின்/அவளின் உயிரோடும் தொடர்புடைய, அச்சுறுத்தல்கள்/சவால்கள். அந்த கேள்விகளுக்கு விடை தேடுவதுதான் இந்த பதிவின் நோக்கம்!

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்று அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. அதையே நம்மையும் நம்பச் சொல்கிறது. ஆனால் இதுகாறும் இந்தியாவை ஆண்ட கட்சிகளின் நிலைப்பாட்டையும் செயல்பாட்டையும் உற்று நோக்கினால் இந்தியாவுக்கு மதச் சார்பின்மை என்பது ஒரு போலியான முகமூடியே என்பது தெரியவரும்.
இங்கே இந்துக்கள் இல்லையா, கிறிஸ்தவர்கள் இல்லையா, வந்தேறிகளான தீங்கள் இந்த நாட்டில் சுதந்திரபாக வாழ்வதில்லையா என்று உங்களுக்கு கேட்கவும் தோன்றலாம். தமிழ்தேசியத்தை ஆதரிக்காதவன் எப்படி தமிழ்நாட்டில் வந்தேறியோ , அப்படியே இந்து தேசியத்தை ஆதரிக்காதவன் இந்தியாவில் வந்தேறி. இவ்வளவுதான் தமிழ்தேசியத்திற்கும் இந்து தேசியத்திற்கும் உள்ள ஒற்றுமையும் வேற்றுமையுமாக இருக்கிறது. நீங்கள் எப்போது தமிழ் தேசியத்தை ஆதரிக்கிறீர்களோ அப்போது தமிழ் மண்ணின் பூர்வீகக் குடிமகனாகி விடுவீர்கள். இது உங்களின் மூதாதையர் மண் என்ற பெருமையும் கிடைக்கும். அதே போல நீங்கள் எப்போது இந்து தேசியத்திற்குள் உங்களை அடைத்துக்கொள்கிறீர்களோ அப்போது இந்திய நாட்டின் பூர்விக சொந்தக்காரர்களாகிவிடுவீர்கள். இதை தவிர்த்து நீங்கள் என்ன செய்தாலும் துரோகிகள் தான், வந்தேறிகள் தான்..

"இத்தகைய கடுமையான
வார்த்தையைக் கையாளுவதால் நான்
ஒரு வகுப்பு வெறியன் என்று இந்திய
தேசியவாதிகளும், தேச பக்தர்களும்
கூறலாம். அதற்காக நான்
பயப்படவில்லை.
இந்திய தேசம் ஒரு விசித்திரமான
தேசம்; அத்தேசத்தின் பக்தர்களும்
ஒரு விசித்திரமான மக்களே யாவர்.
இந்தியாவிலுள்ள தேசியவாதியும்,
தேசபக்தனும் தங்கள் சொந்த சகோதர
மக்கள் சாதாரண மனிதர்களை விடக்
கீழாக நடத்தப்படுவதைக் கண்கூடாகப்
பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
அவர்களுடைய
மனிதத்தன்மை இக்கொடுமைக்கு எதிராகக்
கொதித்தெழவில்லை. ஆணும்
பெண்ணும் யாவராயிருப்பினும்
அவர்க்கு மனித உரிமைகளை மறுக்க
முடியாது என்பதை அவர்கள்
அறிந்துள்ள போதிலும்
செயல்முறையில்
அதனை உணர்ந்து நடக்க வேண்டும்
என்கிற குடியுரிமையுணர்
வு அவர்களிடம் இல்லை. ஒடுக்கப்பட்ட
வகுப்பினர் அனைவரும்
பொது ஊழியத்துறையிலிர
ுந்து விலக்கப்படுவதை அவர்கள்
காணவே செய்கின்றனர். ஆனால்
அது அவர்களுடைய நீதியுணர்வையும்
, நேர்மையுணர்வையும்
தூண்டாமலிருப்பதுதான்
வியப்புக்குரியது.
மனிதனையும் சமூகத்தையும்
பீடித்துள்ள நூற்றுக்கணக்கான
கொடுமைகள்
அவர்களுக்கு நன்கு தெரிந்தனவே.
ஆனால் அவை எதுவும்
அவர்களுக்கு அருவெருப்பை தருவதாக
இல்லை!"
- அண்ணல் அம்பேத்கர்
(தொகுதி:5, பக்கம்:154)
இந்திய தேசம் குறித்தும் சாதி இந்துக்களின் மனப்பாங்கு மற்றும் செயல்பாடு குறித்தும் அண்ணல் அம்பேத்கர் உதிர்த்த வார்த்தைகள்தான் மேலே இருப்பவை. ஆண்டுகள் பல கடந்துவிட்டன. ஆனால் அவர்களின் மனப்பாங்கிலும் செயல்பாட்டிலும் எந்த ஒரு சிறு மாற்றமும் ஏற்பட்டதாக தெரியவில்லை என்பதையே இப்போதும் தொடரும் இந்துத்துவ வெறியர்களின் வன்முறைப் பேச்சுகளும் செயல்களும் நமக்கு உணர்த்திக்கொண்டேயிருக்கின்றன.
ஒரு சாதி இந்துவின் சொல்லும் செயலும் முற்றிலும் முரணானதாக இருக்கிறது. அவர் தனது வார்த்தைகளின் மூலம் உலகத்திலேயே அதிநல்லவராக தன்னைக்காட்டிக்கொள்கிறார். ஆனால் அவரின் செயல்பாடுகளோ அருவறுக்கத்தக்கதாக இருக்கின்றன.
தன்னைப் போன்ற அனைத்து உணர்வுகளும் உரிமைகளும் உடல்புலன்களும் உணர்ந்தறியும் அறிவுமுடைய சக மனிதனை எந்த ஒரு சாதி இந்துவும் தனக்கு சமமானவனாக கருதுவதற்கு தயாராயில்லை. தான் ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறந்தவர் என்பதற்காகவே தான் மற்றவர்களைவிட உயர்ந்தவர் என்றும் மற்றவர்களை மிக கீழானவர்களாக நடத்துவதற்கு சிறப்புரிமைகள் உடையவர் என்றும் அவர் கருதுகிறார். ஒரு பசுவை நடுவீடு வரை அழைத்துச்சென்று அதன் கோமியத்தை புனிதமானதாக உணரக்கூடிய சாதி இந்துவுக்கு தன்னைப்போன்ற சக மனிதனின் நிழல் தன் மேல் படுவதும் விரும்பதகாததும் மிகுந்த கசப்புக்குரியதுமாக இருக்கிறது.
இதோ ஆர்எஸ்எஸ் கும்பல் தனது வார்த்தை ஜாலங்களால் இரண்டாம் முறையும் மத்திய ஆட்சியைப் பிடித்திருக்கும் சூழலில் இந்த இந்துத்துவ உணர்வானது திட்டமிட்டு மேலும் மேலும் வளர்க்கப்படுகிறது.
மோடி என்ற ஒற்றை நபரின் கண்ணசைவில் ஆடிக்கொண்டிருக்கிறது மொத்த காவிக் கூட்டமும். மோடியோ ஆர்எஸ்எஸ் ஸின் கைப்பிள்ளையாக ஆடும் தஞ்சாவூர் பொம்மையாக இருக்கிறார். மோடி குஜராத்தில் இருந்தபோது மேற்கொண்ட தீவிர இந்துத்துவ வெறிச்செயல்களுக்கு பலனாகவே இன்று பிரதமர் பதவியில் உட்கார வைக்கப்பட்டிருக்கிறார். அவரின் தீவிர சிறுபான்மை விரோதப் போக்கு அனைவரும் அறிந்ததே. அதனாலேயே அவரின் மீது மிகுந்த எதிர்பார்ப்போடும் நம்பிக்கையோடும் இந்த பதவிக்குரியவராக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார்.
நாட்டிலுள்ள ஒட்டுமொத்த மக்களும்தானே வாக்களித்து மோடியை பிரதமராக தேர்ந்தெடுத்தார்கள், ஏதோ பார்ப்பனர்களும் ஆர்எஸ்எஸ்காரர்களும் மட்டுமே தேர்தலில் பங்கேற்றது போல பேசுகிறீர்களே என்று உங்களுக்கு தோன்றலாம். மோடியின் முழு உருவத்தையும் உறித்துக்காட்ட இந்த பதிவு போதாதெனினும் சிலவற்றையாவது இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
டீக்கடை வைத்திருந்தவர் இன்று பிரதமராகியிருக்கிறார் என நாவலிக்க பெருமை பேசுகிறார்கள். ஆனால் அவர் போட்ட இந்துத்துவ டீயில் ஆர்எஸ்எஸ் கொள்கைகளை கலந்து அதில் ஊழல் எதிர்ப்பு, தேச வளர்ச்சி என்ற டீகாஷனை சேர்த்து விநியோகித்த விஷயம் அவரை தொடர்ந்து உற்று நோக்குபவர்களுக்கு நன்றாகவே புரியும்.
கோத்ரா ரயில் தீப்பிடிப்புச் சம்பவத்தை அடுத்து அரங்கேற்றப்பட்ட கொடூர வன்முறையில் நூற்றுக்கணக்கான சிறுபான்மையின மக்கள் துள்ளத்துடிக்க வெட்டிக்கொல்லப்பட்டார்கள். உயிருடன் தீவைத்து எரிக்கப்பட்டார்கள். இஸ்லாமியர்களின் வீடுகள், கடைகள் அனைத்தின் மீதும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக்கிழித்து சிசுவை வெளியெடுத்து வெட்டி கொல்லுமளவிற்கு நரமாமிச வெறிப்பிடித்தவர்களாய் ஆட்டம்போட்டார்கள் இந்துத்துவ வெறியர்கள்.
எல்லாம் முடிந்த பின் மோடி உதிர்த்த வார்த்தைகளை நீங்கள் கவனிக்க வேண்டும். " பெரும்பான்மையினருக்கு சிறுபான்மையினர் அடங்கிப்போவதுதான் நல்லது. இல்லையெனில் இப்படியான வன்முறைகளை தவிர்க்கமுடியாது. " ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் தன் சொந்த மக்களுக்கு, அடங்கிக் கிட, இல்லனா தீர்த்து கட்டிடுவோம் என பகிரங்க மிரட்டல் விடுத்தார்.
அதைவிடக்கொடுமையாக, கண்ணெதிரிலேயே உறவுகளை பறிகொடுத்து நிர்க்கதியாய் அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருந்தார்கள் லட்சக்கணக்கான மக்கள். கோழிப்பண்ணையில் கோழிகளை அடைத்து வைப்பது போன்ற அந்த அகதிமுகாம்களைப்பற்றி மோடி உதிர்த்த கருத்து வன்மத்தின் உச்சம். " அகதிமுகாம்கள் குழந்தை உற்பத்தி மையங்களாகிவிட்டன" . இப்படி குரோதத்தை உமிழ்ந்த நபர்தான் இன்று வளர்ச்சியின் நாயகனாக உருவகப்படுத்துகிறார்.
எதற்கு நடந்து முடிந்ததையே பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என அலுத்துக்கொள்கிறீர்களா? சலிப்பாயிருந்தாலும் இன்னும் கொஞ்சம் மீதி கதையிருக்கிறது. பிறகு உங்கள் கேள்விக்கு நிச்சயம் பதில் சொல்கிறேன்.
குஜராத் படுகொலைகளின் பழியிலிருந்து நீதிமன்றம் மோடியை விடுவித்திருக்கலாம். ஆனால் அதன்பொருட்டு அவர் ஒருநாளும் உத்தமராகிவிட மாட்டார். அந்த வழக்கில் சாட்சி சொன்ன காவல்துறை கண்காணிப்பாளர், வாதாடிய வழக்கறிஞர், விசாரித்த நீதிபதி ஆகியோரின் கதி என்னவானது என்பது நீங்கள் அறிந்த விஷயம் தான். சில நினைவுகள் நம்மை விடாது துரத்திக்கொண்டேயிருக்குமல்லவா? அப்படி ஒன்று பல நாட்கள் என்னை உறங்கவிடாமல் அழச் செய்திருக்கிறது. உயிர் பிச்சை கேட்டு இரு கைகளையும் கூப்பி உயிர் பிச்சை கேட்கும் முஸ்லீம் இளைஞனின் படம் அது. அதை வெறும் படம் மட்டும் என்று சொல்லமுடியாது, ஒரு கொலைக்களத்தின் சாட்சி.
சரி, இஸ்லாமியர்களை தீர்த்துக்கட்டியதன் மூலம் ஆர்எஸ்எஸ் ஸின் நம்பிக்கைக்குரிய தளபதியாயிற்று. ஆனால் முழு அறுவடையையும் செய்ய அது மட்டுமே போதுமா என்ன? ஆர்எஸ்எஸ் ஆல் அவரை பாஜகவின் பிரதம வேட்பாளராக மட்டும்தான் அறிவிக்க முடியும். ஆனால் தேர்தலின் சூட்சுமத்தை கற்று தெளிந்தவராச்சே மோடி, சும்மாயிருப்பாரா?
கடந்த தேர்தலின் போது மோடியை பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது இரண்டு கோஷங்கள் முக்கியமாக வைக்கப்பட்டன. ஊழலற்ற ஆட்சி, குஜராத் போன்று நாடெங்கும் வளர்ச்சி . இரண்டுமே கடைந்தெடுத்த பொய்கள் என்பதை பலரும் பலமுறை ஆதாரங்களோடு நிரூபித்தாயிற்று.
ஊழலற்ற ஆட்சியென நீட்டி முழங்கிய மோடியின் குஜராத் அமைச்சரவை சகாக்கள் பலர் மீதும் ஊழல் கறை அழுந்த படிந்திருக்கிறது. குஜராத்தில் உபரி மின்சாரம் சேமிக்கப்படுமளவிற்கு மின்உற்பத்தியில் வளர்ச்சி என்பது மேலோட்டமான உண்மை. ஆனால் அங்கு மின்சாரமே எட்டிப்பார்க்காத நூற்றுக்கணக்கான கிராமங்களிருக்கின்றன. விவசாயிகளுக்கு அதிக விலையில் மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. அப்படியே காசு போனால் போகட்டும், வேறு வழியில்லையே என விண்ணப்பித்த பல விவசாயிகளுக்கும் மின் இணைப்புகளே கொடுக்கப்படவில்லை. ஆனால் கார்ப்பரேட்டுகள் சிவப்புக்கம்பளமிட்டு வரவேற்கப்பட்டார்கள். விவசாயிகளின் நிலங்கள் வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்டு கார்ப்பரேட்டுகளுக்கு மிக மிக குறைந்த அடிமாட்டுவிலையில் தாரை வார்க்கப்பட்டது. இப்படியெல்லாம் கார்ப்பரேட்டுகளின் செல்ல நாய்குட்டியாய் வாலாட்டியதன் பலனாக பணமுதலைகள் அவரை தலைமேல் வைத்து கொண்டாடினார்கள். அவருடைய கூட்டாளி கார்ப்பரேட்டுக் கொள்ளையன் அதானி மற்றும் இன்ன பிற பண முதலைகளின் ஆசி பரிபூரணமாக இருந்தது.
ஆர்எஸ்எஸ் ஸின் ஆசி + கார்ப்பரேட்டுகளின் காசு = மோடியின் தேர்தல் வெற்றி. ஊடகங்களுக்கு பணம் தண்ணீராய் வாரியிறைக்கப்பட்டது. புலனாய்வு ஊடகங்கள் சில இப்படி மோடி குறித்த கட்டுரைக்காக பணம் கைமாறியதை ஆதாரத்தோடு நிரூபித்தது. பேஸ்புக் ட்வீட்டரிலும் மோடியை புகழ்ந்து தள்ளவும் பரப்புரை செய்யவும் ஆயிரக்கணக்கான போலி கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டன. இதற்காகவே அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தை குத்தகை எடுத்தார்கள். சமீபத்தில் மோடி வெற்றிப் பெற்ற வாரணாசி தொகுதியில் மூன்றே கால் லட்சம் போலி வேட்பாளர்கள் சேர்க்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மோடி ஏறக்குறைய இதே அளவு வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படி ஆர்எஸ்எஸ் ஸின் வெறியூட்டும் பேச்சுகள் ஒருபுறம் சாதி இந்துவை உசுப்பேற்றி விட, கார்ப்பரேட்டுகளின் கள்ள பணத்தின் உதவியோடு மோடி என்ற போதை வஸ்து இந்திய தேர்தல் சந்தையில் வெற்றிகரமாக மார்க்கெட்டிங் செய்யப்பட்டது. இதுதான் மோடி வெற்றி பெற்ற கதை.
மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தின் போதே தனது அமையவிருக்கும் அரசு எதை நோக்கி பயணிக்கப்போகிறது என்பதை தெளிவாகவே உணர்த்திவிட்டார். வளர்ச்சி வளர்ச்சி என மூச்சுப்பிடித்து கத்தினாலும் அதன் அடிநாதமாய் இந்துத்துவ சரக்கு மறைந்தே பயணித்துவந்தது. அப்போதுதான் மோடி அந்த மகத்தான உளறல் தத்துவத்தை உதிர்த்தார். இந்திய தேசியம் என்பதே இந்து தேசியம் தான் என்பதே மோடியின் நாடறிந்த உளறலின் தொடக்கம். அன்று முதல் இன்றுவரை அவரும் அவரின் சகாக்களும் ஓயாது உளறிக்கொண்டேயிருக்கிறார்கள். ஆனால் இந்த உளறல்கள் எல்லாம் திட்டமிடப்பட்டவையே. சரி. அது என்ன இந்து தேசியம்?

ஆர்எஸ்எஸ் காரர்களும் விஹெச்பி சங்பரிவார்களும் பாஜகவினரும் சிவசேனாக்களும் நவசேனைகளும் தொடர்ந்து இந்திய தேசியம் என்பதே இந்து தேசியம்தான் என்பதை வலியுறுத்தி வருகிறார்கள். இந்திய தேசியம் என்பதே ஒரு மாயையான உருவாக்கம்தான் எனும்போது , இந்து தேசியத்தை, எப்படி , எதன்வழி புரிந்து கொள்வது?
முதலில் தேசியம் என்பதற்கு ஆய்வியல் வல்லுநர்கள் என்ன வரையறை வைத்திருக்கிறார்கள் என்று பார்ப்போம். தேசியம் எனப்படுவது கீழ்க்கண்ட கூறுகளை கொண்டிருக்க ேண்டும்.
* பொது மொழி
* பொது பண்பாடு
* சேர்ந்தார் போன்ற நிலப்பகுதி
* பொதுவான பொருளியல் வாழ்வு
* பொது பண்பாட்டில் உருவான
உளவியல் உருவாக்கம்
இப்போது இதனடிப்படையில் இந்துத்துவ அரசியலை அணுகினால் இந்து தேசியத்தை கட்டி எழுப்புவதற்கான ஆயத்தங்களை காவிக் கூட்டத்தினர் தொடர்ந்து செய்து வருகிறார்கள் என்பது புலனாகிறது. இந்தியாவில் பலமொழி பேசும் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
ஆனால் இவர்கள் கட்டியமைக்க விரும்பும் இந்து தேசியத்திற்கு தோதாக சமஸ்கிருதத்தின் வழிவந்த இந்தியை இந்தியா முழுமைக்குமான பொதுமொழியாக திணிக்க துடிக்கிறார்கள். மோடி அரசு பதவியேற்றதும் இந்த இந்துத்துவ ரயில் றெக்கை கட்டி பறந்தது.
அனைத்து மத்திய அலுவலகங்களிலும் இந்தி கட்டாய தொடர்பு மொழியாக்கப்பட்டது. மாநில அரசுகளுக்கு அனுப்பக்கூடிய சுற்றறிக்கைகள் அனைத்தும் இனி இந்தியிலேயே இருக்குமென்றும் மாநில அரசுகளும் மத்திய அரசோடு இந்தியிலேயே தொடர்பு கொள்ள வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டது. அதைவிட பொதுமக்கள் படித்து தெரியவேண்டிய அரசின் நலத்திட்டங்கள் மற்றும் அறிக்கைகள் கூட இந்தியிலேயே ஊடகங்களுக்கு அனுப்ப தொடங்கினார்கள்.
இந்தியில் பேசுவதையே இந்தியாவின் பெருமைமிகு அடையாளமாக மாற்றத் தொடங்கினார்கள். இன்று வைகோ , தான் ஆடவில்லையம்மா தசையாடுது, ரேஞ்ஜில் புகழ்ந்துதள்ளும் வாஜ்பாய்தான் இதற்கான ஆரம்பவிதையை விதைத்தவர். ஐநாவில் முதன்முறையாக இந்தியில் உரையாற்றியவர் என்பதை பூதாகரமாக்கி மக்களிடையே பரப்பினார்கள். அதன் தொடர்ச்சியாகத்தான் மோடி இப்போது தான் செல்லும் இடங்களிலெல்லாம் இந்தியில் உளறிக்கொட்டிவருகிறார். இந்தி படிப்பது நல்லது, அது அறிவைக் கொடுக்கும், வேலை கொடுக்கும் என்பதாக பார்ப்பன அறிவு ஜீவிகள் மற்றும் ஊடகங்களின் வாயிலாக கருத்துருவாக்கம் புனையப்பட்டது. இந்தி படித்தால் என்ன வேலை கிடைக்கும் என்பதற்கு வட இந்தியாவிலிருந்து இங்கு வந்து கொத்தடிமைகளாக அல்லல்படும் தொழிலாளர்களும், அது என்ன மாதிரியான புத்தியை கொடுக்கும் என்பதற்கு மோடி உள்ளிட்ட காவிக்கூட்டமும் நம் கண்முன்னாலுள்ள உதாரணங்கள்.
ஆக ஒரு தேசியத்தை கட்டியமைப்பதற்கு ஒரு பொதுமொழி தேவை என்கிறவகையில் அவர்கள் தங்கள் இந்துத்துவ சரக்குகளுக்கு தோதான சமஸ்கிருதத்தின் வழிதோன்றலான இந்தியை தேர்ந்தெடுக்கிறார்கள். அப்படி இந்து தேசியம் கட்டியமைக்கப்பட வேண்டுமெனில் நாம் நமது தாய்மொழியான தமிழை முற்றிலும் மறந்து இந்தியை வரிந்துக்கட்டிக்கொண்டால்தான் இயலும். இந்தியாவின் பலமொழி கோட்பாட்டை தகர்த்து , இந்தியா - இந்தி - இந்துத்துவம் என்று கட்டமைப்பதே இவர்களின் நோக்கம்.
அதற்கடுத்து, பொதுவான பண்பாடு. இந்தியா முழுமைக்குமான பொதுவான பண்பாடு என்ற ஒன்றிருக்கிறதா?
இந்திய தேசத்திற்கென பொதுவான பண்பாடு என்ற ஒன்றிருக்கிறதா? இல்லையென்றே வரலாறு சொல்கிறது. இந்தியா என்கிற தேசமே பிரிட்டிஷாரின் தொடர் ஆக்கிரமிப்புகளால் கட்டியமைக்கப்பட்ட ஒன்று தான். அப்படியிருக்க இந்தியா முழுமைக்குமான பொதுவான பண்பாடு என்பது சாத்தியமே இல்லாத ஒன்று. அப்படி எனில் இந்த காவிக்கூட்டத்தினர் எதை இந்தியாவின் பொதுப் பண்பாடாக முன்னிறுத்துகிறார்கள்?
ஆரியப் பண்பாட்டையே இந்திய பண்பாடாக நிலைநிறுத்தக்கூடிய முயற்சிகளையே தொடர்ந்து செய்து வருகிறார்கள். காவிக்கூட்டத்தினரை இவ்விஷயத்தில் அம்பலப்படுத்துவதற்குமுன் காங்கிரஸையும் கொஞ்சம் அலசுவோம். காங்கிரஸின் மூலக்கர்த்தாக்களாக அறியப்படுகிற நேரு பார்ப்பனரும் காந்தி பனியாவும் தங்களை பொதுவுடைமைவாதிகளாக காட்டிக்கொண்ட தீவிர ஆர்எஸ்எஸ்க்காரர்களே.
காந்தி தனது கடைசி மூச்சுவரை சாதியத்தின் தீவிர ஆதரவாளராகவே இருந்தார். அதற்காக அவர் ஒரு கணமும் வருந்தியதேயில்லை. " எனக்கு சோர்வு ஏற்படும்போதெல்லாம் பகவத் கீதையை எடுத்து வாசிப்பேன். அதில் எனது பல கேள்விகளுக்கு விடை கிடைத்து தெளிவு பிறக்கும் " என்பது காந்தியின் கூற்று.
நானே நான்கு வர்ணங்களையும் உண்டாக்கியவன் என்று சாதிக்கு புனிதமுலாம் பூசிய பகவத்கீதையிலிருந்தே தனது செயல்களுக்கான ஊக்கத்தைப் பெற்றார் என்பது காந்தியின் ஒப்புதல் வாக்குமூலம். இப்படிப்பட்ட காந்தியின் கனவு தேசத்தைதான் காங்கிரஸார் தொடர்ந்து முன்னிறுத்திவந்தார்கள். தமிழ்தேசியத்தின் புதிய சரக்கான தமிழருவி மணியனும் காந்திய மக்கள் இயக்கம் என்ற பெயரில் காந்தியை உயர்த்தி பிடிப்பதிலிருந்தே அவர்கள் முன்வைக்கும் தேசியத்தின் மாதிரி நம் கண்முன் தெளிவாகவே தெரிகிறது. தேவைப்படும்போதெல்லாம் மதச்சார்பின்மை முகமூடியை எடுத்து அணிந்துகொள்ளவேண்டிய கட்டாயம் காங்கிரஸுக்கு இருப்பதால், இப்படியான அப்பட்டமான சாதி வெறியரான காந்தி காங்கிரஸை விட பாஜகவிற்கே பெரிதும் பயன்படுவார் என்பதை உணர்ந்த மோடி , இப்போது காந்தியை ஆரத்தழுவிக் கொண்டிருக்கிறார்.
ஆரியர்களின் மதச்சடங்குகளையும் வேதங்களையும் சாஸ்திரங்களையும் மகாபாரதம், ராமாயணம், பகவத்கீதை போன்ற புனைவுக்கதைகளையுமே இந்தியா முழுமைக்கான பொதுப் பண்பாடாக ஆக்கிவிட காவிப்படையினர் துடிக்கிறார்கள்.
இந்தியா பல மதங்களை உள்ளடக்கிய நாடு. மேலும் மதமற்றவர்களாக தங்களை அறிவித்துக்கொண்ட பல்லெண்ணிக்கையிலான மக்களையும் கொண்ட நாடு. ஆனால் இங்கே இந்து பண்டிகைகள் முன்னிறுத்தப்படுமளவிற்கு வேறு மதப் பண்டிகைகள் முக்கியத்துவபடுத்தப்படுவதில்லை. இந்தியா என்பதே இந்துக்களின் தேசமாகவும் மற்றெல்லாரும் வந்தேறிகளாகவும் உருவகிக்கிறார்கள் கைபர் போலன் கணவாய் வழியே இந்தியாவுக்குள் வந்தேறிய ஆரியக்கூட்டத்தினர்.
சரி, மற்ற மதக்காரர்களை விடுங்கள், இந்துக்களுக்குள்ளேயேனும் பொதுவான பண்பாடு என்ற ஒன்று இருக்கிறதா என்றால் அதற்கும் இல்லை என்றே பதில் கிடைக்கிறது.
இந்துமதத்தில் கடவுளர்களின் எண்ணிக்கைக்கு அளவேயில்லை. அள்ள அள்ளக் குறையாத குப்பைகளென குவிந்துகிடக்கும் புராணங்களிலிருந்தும் சொல்வழி கதைகளிலிருந்தும் அவரவர் விருப்பப்படி புதுப்புதுக்கடவுளை உருவாக்கிக்கொள்ளலாம். ஆனால் அய்யனார் அல்லது ஒண்டிவீரப்பன் அல்லது மதுரைவீரன் கோயில் பூசாரி ஒருபோதும் பெருமாள் அல்லது சிவன் கோயிலின் கருவறைக்குள் நுழையவே முடியாது.சரி, இதை கூட விடுங்கள். அய்யனாரைக்கும்பிடுகிற அதே தப்பாட்டம், பறை, கறிசோறு படையலோடு அதே மதத்தின் கடவுளர்களாக சொல்லப்படுகிற பெருமாளையும் சிவனையும் வணங்க முடியுமா? அனுமதிப்பார்களா? பின் எங்கிருக்கிறது இந்தியா முழுமைக்குமான பொது பண்பாடு?
அடுத்து தேசியம் குறித்த வரையறையில் வருவது சேர்ந்தாற்போன்ற நிலப்பகுதி. காவிக்கூட்டத்தினர் ஆட்சியைப் பிடிக்கும்போதெல்லாம் அகண்ட பாரதம் அமைப்பதே எங்கள் லட்சியம், இந்தியாவின் ஓரடி மண்ணைக்கூட அந்நியருக்கு விட்டுத்தர மாட்டோம் என்றெல்லாம் வீரவசனம் பேசுவது வழக்கம். ஆனால் இந்தியா என்ற நாடு எப்போது உருவானது? முதன்முதலில் முகமதிய படையெடுப்பின் போதுதான் இங்கிருப்பவர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்திக்காட்ட சிந்துநதிக்கரையோரம் வாழ்ந்த மக்களை இந்தியர்கள் என்று அழைத்ததாக வரலாற்றுக்குறிப்புகள் கூறுகின்றன.
பின் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் சிதறுண்டு கிடந்த பலதேசங்கள் படையெடுப்புகளின் மூலம் ஒரே நிலப்பரப்பாக இணைக்கப்பட்டன. அவர்களின் நிர்வாக வசதிக்காக உருவானதே இன்றைய இந்தியா. இது உண்மையில் பல தேசங்களின் ஒன்றியமேயொழிய ஒரே நாடு என்னும் சொல்லப்படுவதற்கான தகுதியை உடையதல்ல.

இந்தியா பல்வேறு தேசிய இனங்களை உள்ளடக்கிய பகுதி. இங்கு பொதுவான பொருளியல் என்பதை நிர்ணயிக்கக்கூடிய சக்தியாக மத்திய அரசே இருக்கிறது. நாட்டின் முக்கிய துறைகள் , வருவாய் ஈட்டுதல், செலவிடுதல் , கட்டுப்படுத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய சிறப்பு அதிகாரங்கள் அனைத்தும் மத்திய அரசிடமே இருப்பதால், நாட்டின் பல்வேறு தேசிய இனங்களான மாநிலங்கள் அனைத்தும் ஒவ்வொன்றிற்கும் மத்திய அரசிடமே கையேந்தும் நிலையிருக்கிறது.
தேசியம் குறித்த வரையறையில் கடைசி கூறாக நாம் காண்பது பொதுவான பண்பாட்டில் உருவான உளவியல். இந்தியா முழுமைக்கும் பொதுவான பண்பாடு என்பதே இல்லை என்றான நிலையில் அதனடிப்படையில் எந்தவிதமான உளவியலை மக்களிடம் காணமுடியும்? ஆனால் பார்ப்பன ஊடகங்களும் பார்ப்பன அடிவருடி ஊடகங்களும் இப்படி ஒரு பொதுப்படையான உளவியலை மக்களிடம் கட்டியெழுப்புவதில் தொடர்ந்து முக்கிய பங்காற்றி வருகின்றன. இந்தியா எனது தேசம் என்ற உணர்வானது தேசபக்தியுணர்வின் அடையாளமாக்கப்பட்டு , மக்களின் சொந்த தேசிய அடையாளத்தை மறக்கடிக்க செய்கின்றன. மக்களின் தேசிய இன உணர்வானது திட்டமிட்டு மழுங்கடிக்கப்பட்டு இந்தியர் என்ற ஒரு குடையின்கீழ் அடைக்கப்படுகின்றனர். இதை மீறி பேசும் எவரும் துரோகிகளாக, தீவிரவாதிகளாக அடையாளப்படுத்தப்படுகிறார்கள்.
விழிப்பாயிருக்க வேண்டிய நாமோ காவிக்கூட்டத்தின் வளர்ச்சி கோஷத்தில் மதி மயங்கி இப்போது விழி பிதுங்கி நிற்கிறோம். என்ன செய்யப் போகிறோம்?
தேசம், தேசபக்தி, வளர்ச்சி என்று காவிக்கூட்டம் எதை சொன்னாலும் அது இந்து தேசியத்தை குறிப்பதாகவே இருக்கிறது. மதச்சாற்பற்ற இந்தியாவில் ஒரு இஸ்லாமிய, கிறிஸ்தவ, சீக்கிய மதகுருவிற்கு அனைத்திந்திய வானொலியில் நேரலையில் பேசுவதற்கான வாய்ப்பு கனவிலும் கிடைப்பதில்லை. ஆனால் ஆர்எஸ்எஸ் தலைவருக்கு கிடைக்கும். இவர்களின் இந்து தேசியத்தின் அடிப்படையே சிறுபான்மையின மக்களை சீண்டி, நாட்டைவிட்டே அவர்களை விரட்டியடிப்பது தான். இப்படியொரு தருணத்திற்காகவே காத்திருந்த இந்துத்துவ வெறியர்களுக்கு காவிப்படை தளபதி மோடியின் கீழ் அமைந்த ஆட்சி பொன்னான வாய்ப்பாக தெரிகிறது.
வளர்ச்சி, வளர்ச்சி என்று நீட்டி முழங்கிய மோடி, உலக வரைபடத்தில் லென்ஸ் வைத்து தேடி எல்லா வெளிநாடுகளுக்கும் போவதையே முதன்மையான பணியாக வைத்திருக்கிறார். ஆனால் இந்தியாவிலோ இதுவரை தேர்தல் பரப்புரைக்காகவன்றி வேறெந்த மாநிலத்திலும் காலடிவைக்கவேயில்லை.
தேர்தல் முடிந்து மாதங்கள் பல ஆகிய இன்னும் அவரிடமிருந்தும் இன்ன பிற சகாக்களிடமிருந்தும் பிரச்சார தொனி விட்டு விலகியதாகவே தெரியவில்லை. இந்திய மக்களின் பணம் ரூ.6500கோடியை கார்ப்பரேட் கொள்ளையன் அதானிக்கு வாரிவழங்கிவிட்டு, ஆஸ்திரேலியா சென்று, கக்கூஸ் கட்ட வேண்டும், காசு கொடுங்கள் என கையேந்துகிறார்.
கிறிஸ்தவ தேவாலயங்கள், இஸ்லாமிய மசூதிகள் என அனைத்துமே இந்து கோயில்களை இடித்துத்தான் கட்டப்பட்டன என்ற கீழ்தரமான பொய்யை தொடர்ந்து பரப்பிவருகின்றனர். சில இஸ்லாமியர்கள் பிரதமரை சந்தித்து, ராமர் கோயில் கட்டப்பட வேண்டுமென்பதே தங்கள் விருப்பமென தெரிவித்ததாக செய்தியொன்று திட்டமிட்டு டிசம்பர் 6க்கு முன் பரப்பப்பட்டது. இதன் மூலம் ஒரே கல்லில் இந்துத்துவக்கும்பல் பல காய்களை வீழ்த்த முனைகிறது. அதன் முதன்மையான நோக்கம் இஸ்லாமியர்களை சீண்டி திட்டமிட்டப்படி பதற்றத்தை உண்டாக்குவது. அடுத்ததாக, இஸ்லாமியர்களும் தங்களின் இந்து தேசியத்தையே விரும்புகிறார்கள் என்ற பிம்பத்தை உருவாக்குவது.
பதிவின் தொடக்கத்தில் படம்பிடித்துக் காட்டிய வெறிப்பிடித்த பேச்சுகளுக்கு சொந்தக்காரர்களான காவிக் கும்பல்தான் திடீர்திடீரென தூக்கத்திலிருந்து விழித்து வீலென அழும் குழந்தையைப் போல கலாச்சாரத்தை பாதுகாக்கிறோம் என காதுகிழிய சவுண்டு கொடுக்க தொடங்கிவிடுவார்கள். ஏற்கனவே பார்த்தபடி ஆரிய பண்பாடு, ஆரிய கலாச்சாரம், ஆரிய மத நூல்களான ராமாயணம், மகாபாரதம் ஆகியவையே இவர்களின் இந்து தேசிய அடிப்படையென்றால், அந்த கேடுகெட்ட கலாச்சாரமோ, பண்பாடோ அற்ற பகுத்தறிவாளர்களாக இருப்பதே சாலச் சிறந்தது.
சும்மாவே சீறும் இந்துத்துவ விஷப் பாம்பிற்கு , ஆட்சி என்னும் முட்டையை கொடுத்து தெம்பாய் நம்மை கொத்தி குதறும்படி வாய்ப்பையும் கொடுத்திருக்கிறோம். ஆனால் இந்த விஷ ஜந்துக்களின் எண்ணிக்கை அதிகமாகி பலுகிப் பெருகுவதற்கு முன்னாவது நாம் விழித்துக் கொள்ள வேண்டும். மதச்சார்பற்றவர்களும் மத நல்லிணக்கத்தை விரும்புபவர்களும் கைக்கோர்த்து முன்னிலும் வலிமையாய் இந்த காவிக்கூட்டத்தை எதிர்த்து ஒடுக்கியாக வேண்டும். இல்லையேல் வீழ்ச்சிக்குள்ளாகப்போவது சிறுபான்மையினர் மட்டுமல்ல, இந்த நாட்டின் கூட்டுக் கதம்பங்களான பல்வேறு தேசிய இனங்களும் ஒட்டுமொத்தமாக அழித்தொழிக்கப்படும் என்பதை மறந்துவிட வேண்டாம்.


-          LEO JOSEPH D
-          dleokommedu@gmail.com







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக