திங்கள், 24 நவம்பர், 2014

மொழிபெயர்ப்பு நாவல்கள் பகுதி இரண்டு

மறந்தவர்களின் கதை

நேற்று பள்ளி முடிந்து பேருந்தில் திரும்புகையில் சில திருநங்கை சகோதரிகளை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் இருக்கையில் அமர்ந்து வர, நானும் மற்றொரு ஆசிரியரும் நின்றபடி பயணம் செய்து கொண்டிருந்தோம்.எனக்குஅருகிலிருந்த ஆசிரியர் இருக்கை கிடைத்ததும் சற்று தொலைவில் போய் உட்கார்ந்து கொண்டார். சிறிது நேரத்தில் எனக்கு இந்த சகோதரிகளுக்கு பக்கத்து இருக்கையிலேயே இடம் கிடைக்க அமர்ந்தேன். ஒரு திருநங்கை சகோதரி என்னை அழைத்தார். எங்கள் உரையாடல் தொடங்கியது. " உங்க பக்கத்துல நின்னிட்டிருந்தாரே, அவர் உங்களுக்கு என்ன வேணும்?" " அவர் சார் மா" " நீங்க?" " நானும் சார் தான். அவர் கூடத்தான் வொர்க் பண்றேன்" " அவர் கூடவா? அவர் விழுப்புரத்துல ------ ஸ்கூல்லதான வொர்க் பண்றாரு" " உங்களுக்கு எப்படி தெரியும் அவரை? அவர் போன வருஷம்தான் கடலூருக்கு டிரான்ஸ்ஃபர் வாங்கிட்டு வந்தாரு" " அவர் கிட்டதான் நான் படிச்சேன். 9th, 10th அவர் தான் எனக்கு கிளாஸ் டீச்சர்" நான் ஆச்சர்யமாய் பார்த்துக் கொண்டிருந்தேன். " அவரை பார்த்து நான் சிரிச்சேன் சார்.. விஷ் பண்ண ட்ரை பண்ணேன். ஏனோ அவர் கண்டுக்கவே இல்ல. அடையாளம் தெரியலயா இல்லதெரியாத மாதிரி அவாய்ட்பண்ணிட்டாரானு தெரியல சார்" நான் இன்னமும் மௌனமாக அந்த சகோதரியை பார்த்துக் கொண்டிருந்தேன்.அவரே தொடர்ந்தார். " நான் ஒரு முட்டாள் சார்.. எனக்கும் இதே விழுப்புரம்தான்சொந்த ஊர். வீட்டை விட்டு துரத்திட்டாங்க.இப்போ தனியா ரூம் எடுத்து தங்கியிருக்கேன். ரத்த சொந்தங்களே அருவருப்பா துரத்தறப்ப அவர் என்ன பண்ணுவார்?" சொல்லி முடிக்கையில் இதற்கு மேலும் கட்டுப்படுத்த முடியாததாய் இரு துளி கண்ணீர் வழிந்தோடியது. எனக்கு நன்றாகவே புரிந்தது அந்த கண்ணீர்இந்த ஆசிரியரின் புறக்கணிப்புக்கு மட்டுமானதல்ல என்று. அது ஆயிரம் வடுக்களை, அவமானங்களை, புறக்கணிப்புகளை, வலிகளை கரைத்தொழிக்க செய்கிற முயற்சி.. இரு சொட்டுக் கண்ணீரில் சோகமெல்லாம் கரைந்துவிடுமெனில் இந்த மானிட வாழ்வுதான் எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கும் எல்லோருக்கும்....? சிறிய ஆசுவாசத்திற்கு பின் மீண்டும் தொடர்ந்தார். " ஆனா அவரை எனக்கு ரொம்பபிடிக்கும் சார். ரொம்ப அழகா பாடம் நடத்துவார். ஆனா அப்போலாம் அவர் எங்கிட்ட ரொம்ப பாசமா இருப்பார்" " நீங்க எத்தனயாவது வரைக்கும் படிச்சிருக்கீங்க?" " பன்னெண்டாவது வரைக்கும் படிச்சேன் சார். அதுக்கப்றம் என்னால இரட்டை நிலைல தொடர முடியல. திருநங்கையாகிட்டேன்.. ஆனா எனக்கு படிக்கணும்னு கொள்ளை ஆசை சார். இப்பதான் ஏதோ கவர்ண்மெண்ட்ல ரூல்ஸ் போட்டிருக்காங்கபோல திருநங்கைகளையும் சேர்த்துக்கணும்னு..." " சரி இப்போ என்ன பண்ணறீங்க?" "தெரு கூத்து பண்றேன் சார். இப்போ கூட போய் குளிச்சு ரெடி ஆகணும். செஞ்சி பக்கம் தேவதானம்பேட்டைல நைட் தெரு கூத்து..." அதற்குள் நாங்கள் இறங்கவேண்டிய இடம் வந்துவிட்டது. " என்னோட பேசிட்டு வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் ஸார். இங்க இருக்கற எல்லார் பார்வைலயும் ஒரு ஏளனம் இருக்கு. ஏன் எங்கூட பேசிட்டு வந்த உங்க மேலயும் அந்த ஏளனப் பார்வை இருக்கு. ஆனா இப்படி அன்பா கனிவா ஒருபுது ஆள் எங்கிட்ட இதுவரைக்கும் பேசனதில்ல. வரேன் சார்..." அந்த சகோதரி இறங்கி போய்விட்டாள். எனக்குள்தான் பல நினைவுகளும் பாடாய்படுத்தியது. ஒடுக்கப்பட்டவர்களின் உரிமை என்று வாய் கிழியபேசுகிறோமே, என்றாவது நான் இவர்களையெல்லாம்நினைத்தேனும் பார்த்திருக்கிறேனா? நான் சாதிரீதியாக ஒடுக்கப்பட்டவன். அந்த சகோதரி பாலின ரீதியாக ஒடுக்கப்பட்டவள். வேறென்ன பெரும் வித்தியாசம்? அட எனக்குகூட ஓட்டரசியலுக்காகவாவது கூப்பாடு போட நாலு கட்சிகள் இருக்கின்றன. சொந்த வீடும் புறக்கணித்து சொந்த மண்ணிலேயே அகதியாய் வாழ்பவர்களுக்கு? நேற்றிரவு அந்த சகோதரியின் தெருக்கூத்து நடிப்பு பலரின் கைத்தட்டலை வாங்கியிருக்கலாம். விடியலற்ற இருள் போர்த்திய வாழ்க்கையை இன்னும் எத்தனைநாள்தான் சுமந்து கிடப்பது?

பல்சுவை நாவல்கள் பகுதி மூன்று

பல்சுவை நாவல்கள் பாகம் இரண்டு

ஞாயிறு, 23 நவம்பர், 2014

வாழ்க்கை வரலாற்று நூல்கள் - பகுதி ஒன்று

வரலாற்று நூல்கள் - பாகம் ஒன்று

மொழிபெயர்ப்பு நாவல்கள்

ஆதவன் சிறுகதைகள்

வியாழன், 20 நவம்பர், 2014

பல்சுவை நாவல்கள் பாகம் இரண்டு

மார்க்சிய நூல்கள் பாகம் மூன்று

மார்க்சிய நூல்கள் பகுதி இரண்டு

செவ்வாய், 18 நவம்பர், 2014

மென்னூல் திரட்டு - 1

தீந்தமிழ் பாடல்கள்

திங்கள், 17 நவம்பர், 2014

பல்சுவை நாவல்கள்

தபூ சங்கர் கவிதைகள்

மார்க்சிய நூல்கள் பாகம் ஒன்று

தேர்வு நூல்கள் -1 மார்க்ஸ், ஏங்கல்ஸ்  

















டாக்டர் அம்பேத்கர் நூல்கள்

சாதி ஒழிப்பு  


டாக்டர் அம்பேத்கரின் தெரிவுசெயயபெற்ற படைப்புகள் ( ஆங்கிலம் )  


பாபா சாஹேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 2  


பாபா சாஹேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 3  


பாபாசாஹேப் டாக்டர் அம்பேத்கர் நூல்தொகுப்பு 4  


பாபாசாஹேப் டாக்டர் அம்பேத்கர் நூல்தொகுப்பு 5 


பாபாசாஹேப் டாக்டர் அம்பேத்கர் நூல்தொகுப்பு 6 


பாபாசாஹேப் டாக்டர் அம்பேத்கர் நூல்தொகுப்பு 7 


பாபாசாஹேப் டாக்டர் அம்பேத்கர் நூல்தொகுப்பு 9  


பாபாசாஹேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 10 


பாபாசாஹேப் டாக்டர் அம்பேத்கர் நூல்தொகுப்பு 11 


பாபாசாஹேப் டாக்டர் அம்பேத்கர் நூல்தொகுப்பு 12 


பாபாசாஹேப் டாக்டர் அம்பேத்கர் நூல்தொகுப்பு 17   

பெரியாரின் நூல்கள் தரவிறக்கம்

குடி அரசு ஒரு பார்வை

தொகுதி 1


தொகுதி 2  


தொகுதி 3


தொகுதி 4


தொகுதி 5 


தொகுதி 6 


தொகுதி 7 


தொகுதி 8 


தொகுதி 9 


தொகுதி 10  


தொகுதி 11 


தொகுதி 12 


தொகுதி 13 


தொகுதி 14 


தொகுதி 15 


தொகுதி 16 


தொகுதி 17 


தொகுதி 18  


தொகுதி 19  


தொகுதி 21` 


தொகுதி 22 


தொகுதி 23 


தொகுதி 24  


தொகுதி 25  


தொகுதி 26  


தொகுதி 27  


குறிப்பு :  தொகுதி 20 மட்டும் தற்சமயம் கிடைக்கவில்லை. மற்ற தொகுதிகளை pdf வடிவில் தரவிறக்கம் செய்து பயனடையும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி.



திங்கள், 3 நவம்பர், 2014

சீன புரட்சியும் சீன கம்யூனிஸ்ட் கட்சியும் - மாவோ

http://www.4shared.com/office/drn3WJqd/Mao_Com_Party_Of_China.htmlhttp://www.4shared.com/office/drn3WJqd/Mao_Com_Party_Of_China.html

ரொமான்ஸ் ரகசியங்கள்

http://senthilvayal.files.wordpress.com/2009/12/tamil-romance-rakasiyangal.pdfhttp://senthilvayal.files.wordpress.com/2009/12/tamil-romance-rakasiyangal.pdf

காரல்மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு

http://senthilvayal.files.wordpress.com/2009/12/karl-marx60s-story-in-tamil.pdfhttp://senthilvayal.files.wordpress.com/2009/12/karl-marx60s-story-in-tamil.pdf

ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் நாவல்

http://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0185.pdfhttp://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0185.pdf

உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி

http://senthilvayal.files.wordpress.com/2012/04/uyir-dr-narayana-reddy.pdfhttp://senthilvayal.files.wordpress.com/2012/04/uyir-dr-narayana-reddy.pdf

ஆங்கிலம் தமிழ் டிக்ஷனரி

http://senthilvayal.files.wordpress.com/2009/04/english-tamil-dictionary.pdfhttp://senthilvayal.files.wordpress.com/2009/04/english-tamil-dictionary.pdf

காமராஜர் வரலாறு

காமராஜர் வரலாறு  pdf download

http://senthilvayal.files.wordpress.com/2009/12/kamarajar.pdfhttp://senthilvayal.files.wordpress.com/2009/12/kamarajar.pdf

ஞாயிறு, 2 நவம்பர், 2014

உண்மை முகமறிவோம்; ஒன்றிணைவோம்

உண்மை முகமறிவோம்; ஒன்றிணைவோம்


காந்தியை பெரும் சகாப்தம் என்றும் மகாத்மா என்றும் சிலாகிப்பவர்கள் கூறுவது அவர் தீண்டாமையை எதிர்த்தார் என்பது தான். ஆனால் காந்தி அதை இந்து சமயத்தில் இருந்தபடியே செய்யவேண்டுமென்றும் சாதி அமைப்பு தொடர வேண்டுமென்றும் வாதிட்டார். அவரின் உண்மை முகத்தை கிழித்தெறிந்து வெட்ட வெளிச்சமாக்கினார் அம்பேத்கர். அவ்வப்போது காந்தியைப் போன்றே பார்ப்பானுக்கு நோகாமல் சாதிப் புரட்சி செய்பவர்கள் அவ்வப்போது ஏதேனும் உளறிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு பார்ப்பானின் பதிவு கீழே..

//மாணவர்களை சாதி பிரச்சனையில் இழுப்பது எந்த மாதிரியான அரசியல்என்று எனக்கு புரியவில்லை ... சில மாதங்களுக்கு முன்னர் ஈழத் தமிழர் நலன் என்கிற ஒரு குடையின் கீழ் அனைத்து மாணவர்களையும் கொண்டு வர முடிந்ததை சிதைக்கும் செயலாகத் தான் இது அமையப் போகிறது ... மாணவர்களும் சாதி ரீதியாக பிரிக்கப்பட்டு , அவர்களிடம் உள்ளஒற்றுமையை சிதைக்கும் செயல் தான் இது ... இதை தூண்டிடும் நபர்களை அரசாங்கம் எப்படி விட்டு வைத்திருக்கிறது?//

ஈழத் தமிழர் நலன் சார்ந்த போராட்டத்தில் மாணவர்களின் ஒன்றிணைப்பு மெச்சப்படவேண்டியது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. தேர்தல் அரசியல் ஒன்றையே மையமாகக் கொண்டு ஈழம் ஈழம் என்று கூவி கட்சிகள் யாவும் ஓட்டுப்பிச்சை எடுத்த நிலையில் மாணவர்களின் தன்னிகரற்ற ஒருங்கிணைப்பே எல்லோருக்குள்ளும் தீயாய் ஈழ உணர்வை பரவச் செய்தது.

காங்கிரஸே சரணம் என்று அது காலால் எட்டி உதைத்தும் கூட கட்டிக் கொண்டு கிடந்த திமுக , காங்கிரஸைக் கை கழுவ காரணம் மாணவர்களின் போராட்டம் தான். ஏன் இப்போதுகூட மகளின் ராஜ்யசபா சீட்டுக்காக யார் யார் காலிலோ விழுந்து கடைசியில் காங்கிரஸிடமே சரணாகதி அடைந்தாலும், தேர்தல் முடிந்ததும் , அய்யய்யோ! காங்கிரஸுடன் கூட்டணியெல்லாம் இல்லை என்று அலறியடித்து அறிவிக்கவும், எந்த கணமும் மீண்டும் புயலடிக்க காத்திருக்கும் மாணவர்களின் போராட்டம்தான் காரணம்.

நிற்க, மாணவ ஈழப் போராட்ட காலங்களில் பரவலானக் குரல் ஒன்று பலரிடமிருந்தும் வெளிப்பட்டது. அது, இதே அர்ப்பணிப்போடு மாணவர்கள் சாதி ஒழிப்பிற்காகவும் ஒன்றிணைய வேண்டும் என்பது தான். சாதி ஒழிப்பிற்காக ஒன்றிணையும் மாணவர்கள் சாதி ரீதியாக பிளந்து நிற்பார்கள் என்பது ஏற்கவொண்ணா வாதம். மாணவர்களின் ஈழப் போராட்ட காலங்களில் கூட அவர்களை பிளவுப்படுத்தி கட்சி ரீதியான ஆதாயம் தேட பலரும் முனைந்தனர் என்பது நாம் அறிந்ததே. ஆனால் மாணவர்கள் எல்லாக் கட்சிகளையும் புறந்தள்ளி களத்தில் நின்றனர். அதே போல் இப்போதும் ஏன் மாணவர்கள் ஒன்றிணையக் கூடாது? உண்மையில் அப்படி மாணவர்கள் ஒன்றிணைந்துவிடக் கூடாது என்பதுதான் பார்ப்பன தேசியவாதிகளின் கனவாகவும் இலட்சியமாகவும் இருக்கிறது.

அரசு எப்படி இவர்களை விட்டு வைத்திருக்கிறது என்ற பார்ப்பன பதிவரின் ஆதங்கம் நியாயமானதே. ஏனெனில் நடப்பது அவாளின் ஆட்சி. மாணவர்கள் சாதி ஒழிப்பென்று கிளம்பிவிட்டால் அவாள்களின் கூட்டம் எப்படி பிழைப்பை ஓட்டுவது? அவர்களை முளையிலேயே ஒடுக்கவேண்டியது அவாள் அரசின் கடமையல்லவா என்ற அவரின் ஆதங்கத்தை நம்மால் தெளிவாகவே புரிந்துகொள்ள முடிகிறது.

தமிழ்தேசியவாதிகளின் உண்மையான முகத்தை புரிந்துகொள்ளவும் ஆகப் பெரிய சந்தர்ப்பமாகவே இதைக் கருதுகிறேன். இதுவரை இளவரசன் படுகொலை குறித்து சீமான், பழ நெடுமாறன் உள்ளிட்ட யாரும் வாய்திறக்கவே இல்லை. திருமுருகன் காந்தி மட்டுமே, சக மனிதனை நேசிக்க உரிமையில்லா ஒரு சமூகத்தை தமிழன் ஆண்டாலென்ன, சிங்களவன் ஆண்டாலென்ன என்று எல்லோர் முகத்திலும் காறி உமிழ்ந்தார்.

பார்ப்பனனை ஒழித்தாலொழிய தமிழன் விடுதலை அடைய முடியாது என்று முழங்கிய பெரியாரை புறந்தள்ளும் இவர்கள் சாதி ஒழிப்பிற்காக முன்னெடுக்கும் விஷயங்கள்தான் என்ன? வெற்று கூச்சல் மட்டுமே. பார்ப்பனர்களை அரவணைத்துக் கொண்டே சாதியை ஒழித்துவிடுவார்களாம்...! இவர்களின் திராவிட எதிர்ப்பிற்கு காரணம் வெறுமனே கலைஞர் மீதான வெறுப்பும் அவரின் குடும்ப ஆதிக்க அரசியலின் மீதான அருவருப்பும் என்பதுபோல் மேலோட்டமாக தெரிந்தாலும் அதன் உள்ளே பல்லிளிப்பது சாதி தான்.

சாதி ஒழிப்போம் என்ற வெற்றுக்கூச்சலிடுவதன் மூலம் மட்டுமே சாதியை ஒருக்காலும் அழித்துவிட முடியாது. இதை தமிழ்தேசியம், இந்திய தேசியம் பேசுகிற யாரும் உணர்ந்தே இருக்கிறார்கள். அவர்களுக்கு சாதி ஒழியவும் கூடாது, சாதி ஒழிப்பாளர்கள் போலவும் காட்டிக்கொள்ள வேண்டும், அவ்வளவே.

சாதி ஒழிய வேண்டுமாயின் சாதியின் ஊற்றுக்கண்ணை அழித்தொழிக்க வேண்டும். சாதியின் ஊற்றுக்கண் எது? இந்துமதமும் அதன் வேத சாஸ்திரங்களும் புராணங்களும் தான். வேதங்களும் புராணங்களும் சாஸ்திரங்களும் பார்ப்பனர்களால் மிக கவனமாக தங்கள் மேட்டிமையை நிலைநிறுத்திக் கொள்ளும் வகையிர் நிர்மாணிக்கப்பட்டவை. இன்று நான் வன்னியன், நான் நாடான், நான் முக்குலத்தான், எனவே உங்களை விட உயர்ந்தவன் என்று மார்தட்டிக்கொள்ளும் யாரும் ஒரு உண்மையை புரிந்தபாடில்லை அல்லது புரிந்தும் மறைத்துக் கொள்கிறார்கள். அது, நீங்கள் என்ன சாதி என்று மார்தட்டிக் கொள்கிறீர்களோ அந்த கணமே நீங்கள் பார்ப்பானை விட தாழ்ந்தவர்கள் என்றும் அவன் கூறுவதுபோல பார்ப்பானைத் தவிர மற்றனைவரும் வேசியின் மகன்கள் என்பதையும் ஏற்றுக் கொள்கிறீர்கள் என்பதுதான்.
இதை தெளிவாக அண்ணலும் பெரியாரும் உணர்த்தியிருக்கிறார்கள்.

வேசியின் மகன் என்று சொல்பவனைக் கோபம் பொங்கியெழ வேண்டாமா? ஆனால் அப்படி எழவிடாமல் இந்த ஏணிப்படி சாதி அமைப்புமுறை தடுத்துவிடுகிறது. நாம் பார்ப்பான்களுக்கெதிராக ஒன்றிணைவதில் காட்டவேண்டிய சக்தியை நமக்குள் சண்டையிடுவதிலேயே செலவிட்டுக்கொள்கிறோம்.

பெரியாரை எதிர்ப்பவர்கள் சொல்லும் ஒரே காரணம், அவர் தெலுங்கன் என்பது. அட அவர் அண்டார்டிகா பிரதேசத்தை சார்ந்தவராக கூட இருந்துவிட்டுப்போகிறார். ஆனால் அதுவல்ல அவர்களுக்கு விஷயம். நாம் பார்ப்பனர்களுக்கெதிராய் ஒன்றிணைந்துவிடக் கூடாது என்பது மட்டுமே.. சூழ்ச்சியறிவோம். சாதி ஒழிக்க கரம் சேர்ப்போம் வாருங்கள். உங்களின் ஒன்றிணைப்பின் ஆற்றலை சமூகம் உணர வேண்டிய தருணம் இது.

-லியோ

குமுதம் ரிப்போர்ட்டரின் சாதிய வன்மம்

குமுதம் ரிப்போர்ட்டரின் சாதிய வன்மம்





14.07.2013 தேதியிட்ட குமுதம் ரிப்போர்ட்டரில் இளவரசன் படுகொலையை தற்கொலை என்று திரித்து செய்தி வெளியிட்டு அதற்கிணையாக புரட்டுகளை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.


இளவரசனின் படுகொலையை தற்கொலை என்று நிறுவுவதற்கு பெரும்பாலான சாதியவாதிகளும் காவல்துறையும் சுட்டிக் காட்டும் ஒரே ஆயுதம் இளவரசனால் எழுதப்பட்டதாகச் சொல்லப்படுகின்ற கடிதம் தான். அது ஏன் இளவரசனை மிரட்டி எழுதவைக்கப்பட்டிருக்கக் கூடாது? ஒரு படுகொலையை தற்கொலை என்று மூடிமறைக்க ஒரே ஒரு கடிதம் மட்டுமே போதுமா? விடை காணப்படாத பல கேள்விகளுக்கு காவல்துறை என்ன பதிலை வைத்திருக்கிறது?

அதே ரிப்போர்ட்டர் இதழில் தோழர் பாலபாரதி அவர்களால் எழுதப்படும் எரிதழல் பகுதியில் இளவரசனின் மரணம் தொடர்பாக சில கேள்விகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அதாவது மரணம் நிகழ்ந்ததாக பிரேதப் பரிசோதனை அறிக்கை சொல்லப்படும் நேரத்தில் அந்த ரயில்பாதை வழியே எந்த ரயிலும் செல்லவில்லை. அப்படியிருக்க வரவே வராத எந்த ரயிலில் அடிபட்டி இளவரசன் இறந்துபோனார்?


' குர்லா எக்ஸ்பிரஸில் மோதியிருந்தால் உடல் சிதறுண்டும் உள்ளுறுப்புகள் உருக்குலைந்தும் போயிருக்கும். எந்த எக்ஸ்பிரஸாக இருந்தாலும் அடுத்த ஸ்டேஷனில் நிறுத்தி நடந்த விபத்து குறித்து தெரிவிப்பதோடு ரயிலின் எந்த பாகம் மோதியது என்பதை அறிந்து அடையாளமிட்டு அதைப் பதிவு செய்வார்கள். இத்தகைய எந்த நடைமுறையும் அங்கே பின்பற்றப்படவில்லை....... '


இளவரசனின் உடலை நேரிலும் தொலைக்காட்சியிலும் பார்த்த எவரும் அவரது ஆடை எந்த கசங்கலுமின்றி கிடப்பதையும் ஒருக்களித்து குப்புறக் கவிழ்ந்து கிடந்ததையும் கவனித்திருக்கலாம். ஒரு சிறுகுழந்தை கூட இதை ரயில் முன் பாய்ந்து தற்கொலை என்று சொன்னால் ஏளனப்பார்வையோடு கடந்துவிடும். ஆனால் இந்த கொடூர சாதிய படுகொலையை அரசும் காவல்துறையும் ஆதிக்கவெறி சாதிகளுக்கு ஆதரவாக மூடி மறைக்க முயல்கிறது.

இந்த சில நாட்களில் தொலைக்காட்சிகளையோ செய்தித் தாள்களையோ கவனிக்கின்ற எவருக்கும் ஒரு செய்தி நிச்சயம் எட்டியிருக்கும். இளவரசனின் மரணம் நிகழ்ந்தவுடன் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்படுகிறது. அதில் இளவரசனின் பெற்றோர் விரும்புகிற மருத்துவர்கள் பிரேத பரிசோதனைக் குழுவில் இடம் பெற வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. தர்மபுரி மாவட்ட எஸ்பி யை நேரிலும் சந்தித்தை இதே கோரிக்கை வலியுறுத்தப்படுகிறது.

ஆனால் இளவரசனின் பெற்றோர் வலியுறுத்திய மருத்துவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் குழு வந்து சேர்வதற்கு முன்பே அவசர அவசரமாக காலையிலேயே பிரேதப் பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த செய்தி பெரும்பாலான நாளேடுகளில் வந்திருக்கிறது. அப்படியிருக்க குமுதம் ரிப்போர்ட்டர் தனது செய்தியில் இளவரசனின் பெற்றோர் வலியுறுத்திய மருத்துவர்களும் தடயவியல் நிபுணர்களும் வந்தபிறகே பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டதாக ஆகாசப்புளுகு ஒன்றை அவிழ்த்துவிட்டிருக்கிறது. முந்தையநாள் பதியப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி, பிரேதப் பரிசோதனை நிகழாமல் இருந்தால் இளவரசனின் பெற்றோர் கூறுவதுபோல அவர்கள் விரும்பும் மருத்துவர்களை பிரேதப் பரிசோதனைக் குழுவில் இடம் பெற உத்தரவிடலாம், ஆனால் பிரேதப்பரிசோதனை முடிந்துவிட்டது. பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட வீடியோ பதிவை இளவரசனின் பெற்றோரிடம் வழங்க வேண்டும். சந்தேகமிருப்பின் மறுபிரேத பரிசோதனைக்கு அணுகலாம் என்று உத்தரவிடுகிறது. குமுதம் ரிப்போர்ட்டர் சாதிய வன்மத்தோடு செய்தியை எவ்வாறு திரித்து வெளியிடுகிறது என்பதற்கு இது ஒரு சான்று.


தந்தை பெரியார் கூறியது போல, பார்ப்பன பத்திரிகை முதலாளிகள் தங்களுக்குள் தொழில்போட்டி இருந்தபோதும் நம்மை ஒடுக்கவேண்டும் என்பதில் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியிருக்கிறது. உண்மை வெளிவரும்வரை உரக்கக் குரல் கொடுப்போம். சாதிப் பேயை இல்லாதொழிப்போம்.

பரமக்குடி துப்பாக்கி சூடு விசாரணையும் பார்ப்பன சூழ்ச்சியும்

பரமக்குடி துப்பாக்கி சூடு விசாரணையும் பார்ப்பன சூழ்ச்சியும்


சாதிய அடுக்குவரிசையில் தங்களை எப்போதும் மேல்நிலையில் தக்கவைத்துக்கொள்ள காலங்காலமாக கடைப்பிடிக்கின்ற அதே சூழ்ச்சிதான் இப்போதும் இந்த பார்ப்பன அரசின் மூலமும் வெளிப்பட்டுள்ளது.

இடைநிலைச் சாதிகளை ஒன்றுக்குடன் ஒன்று மோதவிட்டு அவர்களை இடையறாது பகையுணர்வில் தொடரச்செய்வதன் மூலம் சாதியத்தை நிலைப்பெறச்செய்யும் தன் பூர்வாங்கத்திட்டத்தை சத்தமின்றி நிறைவேற்றிக்கொள்கிறது.

கடந்த இமானுவேல் சேகரன் அவர்களின் விழாவிற்கு முந்தைய நாட்களில் ஒரு தலித் சிறுவன் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டான். (அந்த வழக்கின் இன்றைய நிலை என்னவென்பது பற்றி ஒன்றும் தெரியவில்லை. ) அந்த படுகொலையை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் அங்கே 144 தடையுத்தரவு பிறப்பித்தது.

காலங்காலமாக மக்கள் கொண்டாடி வரும் விழாவிற்கு தடையுத்தரவு போடுவதன் மூலம் பிரச்சினைக்கான முதற்படியை அரசே ஏற்படுத்தியது. ஒரு சாதி தலைவரை கைது செய்யக்கூட 5000க்கும் மேற்பட்ட போலீசாரை ஓரிடத்தில் குவிக்கும் இந்த அரசு, ஆண்டு தோறும் வழக்கமாக நடைபெறும் ஒரு நிகழ்விற்கு திடீரென தடையுத்தரவு பிறப்பித்ததே அதன் பிறகான எல்லாவற்றிற்கும் மூல காரணியாக விளங்கியது. மக்கள் பெருமளவில் கூடுவார்கள் என்பதை கூட கணிக்கவியலாத முட்டாள் அரசாங்கமா இது? அதற்கேற்றபடி பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியது மாநில அரசின் கடமை. ஆனால் எந்த ஒரு நிகழ்வானாலும் சரி, 144 தடையுத்தரவு பிறப்பிப்பதன் மூலமே சட்டம் ஒழுங்கை நிலைநாட்டிவிடலாம் எனும் நினைப்பில்தான் இன்றைய அரசாங்கம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

விழுப்புரத்தில் தடையுத்தரவு இருந்த காலத்தில் தான் அதிகமான கொலை வழக்குகள் பதிவாகின. இடிந்தகரையில் தடையுத்தரவு இருந்த நிலையில்தான் மக்களின் போராட்டம் தீவிர வடிவம் பெற்றது. எனில் பரமக்குடி சார்ந்த ராமநாதபுரம் மாவட்டத்தில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டதே சாதி கலவரத்திற்கு நெருப்பு மூட்டத்தானோ என எண்ண வேண்டியிருக்கிறது.

நிற்க, மக்கள் கட்டுக்கு அடங்கவில்லை, கலவரத்தில் இறங்கினார்கள் , அதை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என்று கூறப்படுகிறது. ஆனால் கலவரத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தை விட சாதிய சக்திகள் தங்கள் ஆதிக்க விஷத்தை தாழ்த்தப்பட்ட மக்களின் கக்குவதற்கான வாய்ப்பாகவே அந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது
என்பதை யாரும் எளிதில் புரிந்து கொள்ளும் சான்றாகத்தான் அந்த படுகொலைகள் நிகழ்ந்தன. அதுவுமல்லாமல் அந்த படுகொலைகள் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டுமென வழக்கு தொடரப்பட்டு விசாரணை இன்றளவும் நிலுவையில் இருக்கிறது. அப்படியிருக்க சம்பத் கமிஷன் விசாரணை அறிக்கையை இப்போது அவசர அவசரமாக தேவர் பூஜை தினத்தில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டிய அவசியம் என்ன? ஒரு வழக்கு குறித்து சிபிஐ விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கும் போதே மாநில அரசு, அப்பிரச்சனையில் தொடர்புடைய அதிகாரிகளுக்கு வக்காலத்து வாங்கி அறிக்கை தாக்கல் செய்ய காரணம் என்ன?

இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படுவதை தடுக்கவே துப்பாக்கி சூடு நிகழ்த்தி ஆறு உயிர்களை கொன்று குவித்தோம் என இறுமாந்து பதில் சொல்லும் ஜெ அரசு , தேவர் பூஜை தினத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அநீதி இழக்கும் வகையிலான அறிக்கையை சட்டமன்றத்தில் யாரை சந்தோஷப்படுத்த? இரு பிரிவினரிடையே மீண்டும் மோதலை தூண்ட செய்யும் பார்ப்பன அரசின் மறைமுக சதியே இது.

தனது பார்ப்பன ராஜகுருக்களின் ஆலோசனைப்படி இடைநிலை சாதிகளிடையே தீமூட்டி அதில் ஓட்டு குளிர் காய விரும்பும் பார்ப்பன சூழ்ச்சி அறிவோம்!

- லியோ

கோவணம் கட்டிய காந்தியும் கோட் சூட் போட்ட அம்பேத்கரும் --வே.மதிமாறன்

கோவணம் கட்டிய காந்தியும் கோட் சூட் போட்ட அம்பேத்கரும்
--வே.மதிமாறன்
மகாத்மா காந்தி அரிஜன் என்று அழைத்ததை போன தங்கம் இதழில் விமர்சித்திருந்தீர்கள். நீங்கள் என்ன குறை சொன்னாலும் ஏழைகளைப் போல், இடுப்பில் வெறும் கதர் ஆடையை அணிந்து வாழ்ந்த அவரின் எளிமையை வேறு எந்த தலைவரிடம் பார்க்க முடியும்?
-டி. கார்த்திகேயன், திருச்சி.
ஒரு தலைவர் கோவணம் கட்டி வாழ்கிறாரா? கோட் சூட் அணிந்து வாழ்கிறாரா? என்பதை விடவும் அவர் யாருக்காக வாழ்கிறார் என்பதுதான் முக்கியம்.
1919 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு வந்த காந்தி, செப்டம்பர் 22 ஆம் தேதி மதுரைக்கு சென்றார். மதுரை மேலமாசி வீதியில் உள்ள ராம்ஜி கல்யாண் சேட்ஜி என்பவரின் பங்களாவில் தான் ஓய்வு எடுத்துள்ளார். சேட்ஜி வீட்டு மாடியில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது, விவசாயிகள் இடுப்பில் மட்டும் துண்டு கட்டிக் கொண்டு போனதை பார்த்துதான், காந்தி அரை ஆடைக்கு மாறினார் என்று சொல்வார்கள். ‘சில்வர் டங்’ சீனிவாச சாஸ்திரி கூட இதை குறிப்பிட்டிருக்கிறார்.
ஏழைகளைப் போல் உடை உடுத்திய காந்தி, அவர்களைப் போல் குடிசையில் வாழவில்லை. மார்வாடி வீட்டு மாடி, பிர்லாவோட மாளிகை இன்றைக்கு பணக்காரர்கள் வார விடுமுறை நாட்களில் ஓய்வு எடுக்கிற ரிசாட்கள் பாணியில் அமைந்த அன்றைய குடில்கள், இது போன்று முதலாளிகள் நிழலில்தான் ஓய்வெடுத்தார்.
ஆக, காந்திக்கு ஏழைகளின் உடை; தன் எளிமையை பிரச்சாரம் செய்ய பயன்பட்ட காஸ்டீயும்தானே (COSTUM) தவிர, ஏழ்மையை ஒழிப்பதற்கான குறியீடு அல்ல.
ஏழைகளின் மேல் அக்கறை கொண்ட தலைவன், ஏழ்மையை ஒழிக்க முயற்சிப்பானே தவிர, அதையே வாழ்நாள் முழுக்க அடையாளமாக்க மாட்டான். ஏழைகளைப் போல் உடை உடுத்திய காந்தி, ஓரு போதும் ஏழ்மையை ஒழிக்க முயற்சித்ததில்லை.
கோவணம் கட்டிய காந்தி, கோட் சூட் போட்ட பிர்லா போன்றவர்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டார்.
கோட் சூட் போட்ட டாக்டர் அம்பேத்கர்தான் கோவணம் கட்டிய ஏழைகளின் பிரச்சினையை தீர்க்க முயற்சி செய்தார்.
*

தமிழ் உணர்வும் சாதியமும்

தமிழ் உணர்வும் சாதியமும்
சென்னை கிரிக்கெட் கிளப்பில்
வேட்டி அணிந்து வர
தடை என்பதை கேள்விப்பட்டு பலரும்
பொங்கியெழுகிறார்கள். தமிழ்
கலாச்சாரத்திற்கு இவ்வளவு தான்
மதிப்பா,அத்தகைய
கிளப்களை உடனே மூடுங்கள் என
பலரும் முஷ்டி உயர்த்துவதைக் கண்ட
பின்னும் இந்த பதிவு எழுத கொஞ்சம்
தயக்கமாகத்தான் இருக்கிறது. இந்த
பதிவின் முடிவில் நான் தமிழின
துரோகியாக பட்டம் கட்டப்படலாம்,
அதனாலென்ன, அம்மா வாழ்க, சீமான்
வாழ்க, மாவீரன் பிரபாகரன் வாழ்க என
மூன்றுமுறை மூச்சு முட்ட,
நரம்பு புடைக்க கத்தினால்
என்னை தமிழன்தான் என மீண்டும்
அங்கீகரித்துக் கொள்வார்கள் என்ற
நம்பிக்கையோடே இதை தொடர்கிறேன்.
சென்னை கிரிக்கெட் கிளப்பில்
வேட்டி அணிந்து நுழைய
தடை என்பது உண்மையில்
இங்கிருப்பவர்களுக்கு இன்று தான்
தெரியுமா என்பது என் முதல் கேள்வி.
அதே சென்னை கிளப்புக்கு கோட்டு சூட்டு அணிந்து பலரும்
இத்தனை காலம்
அளாவளாவிக்கொண்டிருந்த போதெல்லாம்
ஊடகங்களின் தமிழ்
பற்று எங்கே போனது? இன்றைய
நிகழ்வை தமிழுக்கு , தமிழ்
கலாச்சாரத்திற்கு ஏற்பட்ட இழிவாக
பார்க்கிறார்களா,
அல்லது உயர்மிகு நீதிபதிக்கு ஏற்பட்ட
இழிவாகப் பார்க்கிறார்களா?
உங்கள் தமிழ் கலாச்சார உணர்வு கூட
மேட்டுக்குடி மக்களுக்கு ஏதேனும்
ஒன்றெனும் போதுதான் பொங்கியெழும்
என இதை நான் எடுத்துக்கொள்ளலாமா?
பிரிட்டிஷ்
காலத்து விதிகளையே இன்னும் நாம்
கட்டிக்கொண்டு அழலாமா என ஆவேசம்
காட்டுகிற தமிழ் உணர்வாளர்களின்
முன், கேட்டு கேட்டு புளித்துப்போன
என் அரதப்பழசான சில
கேள்விகளையே மீண்டும் முன் வைக்க
ஆசைப்படுகிறேன்.
எது தமிழ் கலாச்சாரம்? தமிழ்
கலாச்சாரமென்பது எதையெல்லாம்
உள்ளடக்கியவொன்றாக
கருதப்படுகிறது?
இன்று சென்னை க்ளப்பில்
வேட்டி அணிந்து நுழைய
தடை என்றதை கேட்டதும்
கொந்தளிக்கும் தமிழ் தேசிய
உணர்வாளர்களில் எத்துணைப் பேர்
இன்னும் பல கிராமங்களில் தலித்துகள்
வேட்டி அணியவும்
செருப்பு அணியவுமே மறுக்கப்படுகிறார்கள்
என்பதை அறிந்து நெஞ்சம்
கொதித்தெழுகிறார்கள்? ஆதிக்க
சாதி பிரிவு மக்கள் வாழும்
தெரு வழியாக கடக்கும்
பள்ளி சிறுவர்கள் தங்கள்
செருப்புகளை இரண்டு கைகளிலும்
தூக்கிக்கொண்டு நடந்த
காட்சியை இவர்கள் மனம் எப்போதேனும்
நினைத்துப் பார்த்திருக்குமா? ஜீன்ஸும்
கூலிங் கிளாஸும் போட்டு எங்கள்
பெண்களை ஏமாற்றுகிறார்கள் என
கூவுகிற அதே வாயாலாயே , தமிழ்
கலாச்சாரம் காக்கப்பட வேண்டும், இந்த
கிளப்புகளை சும்மா விடக்கூடாது,
உடனே இழுத்து மூட வேண்டுமென
வாய்வலிக்க பேட்டியுமளிக்க
முடிகிறதே எப்படி?
ஆம், தமிழ் உணர்வும் சாதி உணர்வும்
எப்போதும் சிறீதும் பிணக்கில்லாமல்
பின்னி பிணைந்து கொள்கிறது.
அதனால்தான் தமிழர்
பாதுகாப்பு இயக்கம் தொடங்க முடிகிற
ஒரு நபரால் தலித் அல்லாதோர்
சாதி கூட்டமைப்பையும் உருவாக்க
முடிகிறது. தமிழ்
பற்றி பேசும்போதே அதற்குள் எளிதாய்
சாதியத்தையும்
பூசி மெழுகிக்கொள்ளலாம்.
தமிழ் உணர்வாளனாயிருக்கும் ஒருவர்
சாதி மறுப்பாளராய் இருக்கவேண்டிய
அவசியமில்லாமல் போய் விடுகிறது.
இவர்கள் தமிழ், தமிழ் கலாச்சாரம்
என்று போற்றி பாதுகாப்பதெல்லாம்
சாதி, சாதி கலாச்சாரத்தை தான்
என்பது தெளிவு.
எது தமிழ் கலாச்சாரம்? உங்கள்
கலாச்சாரமென்பது உடை அடையாளம்
மட்டும் தானா? ஆரிய வேத
சடங்குகளும் எந்த இடை தரகர்களும்
இல்லாது தனக்கான
இணையை தானே தீர்மானித்துக்கொள்கி­
ற உரிமை ஆண், பெண்
இருவருக்குமே இருந்ததே , அதுதான்
தமிழ் கலாச்சாரம். ஆனால்
சாதிக்குள்ளே காதல் செய்தால்
மட்டுமே அது உண்மை காதல் என
பிதற்றி திரிகிறீர்களே,
அது சாதி கலாச்சாரம்!

பத்தாம் வகுப்பு படிக்கிற மாணவன்
சாதி வெறியர்களால்
கொடூரமாக தாக்கப்படுகிறான்.
தொடர்ந்து பதின்வயது சிறுமிகள்
பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்­
பட்டு சிதைக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
உடைமைகளும் வீடுகளூம்
அடித்து நொறுக்கப்படுகின்றன.
பள்ளியில்
மாணவர்களுக்கு வைத்திருந்த நீர்
பானையில் நீரை மோந்து குடித்ததற்காக
ஆசிரியரால் ஒரு சிறுமி பிரம்பால்
தாக்கப்பட்டு பார்வை பாதிக்கப்படுகிறாள்.
ரேஷன் கடையில்
மற்றவர்களோடு வரிசையில்
நின்றதற்காக ஒரு பெண் மானப்பங்க
படுத்ணப்படுகிறாள்.. சொல்லி தீராத
ரணங்களென எங்கள் துயரங்களின் நீளம்
மிக அதிகம்.. ஆனால் இதையெல்லாம்
நீங்கள் கண்டும் காணாமல்
கண்மூடி கடந்தீர்களே,
எதை காப்பதற்காக? தமிழ்
கலாச்சாரத்தைக் காக்கவா,
இல்லை சாதி கலாச்சாரத்தைக்
காக்கவா?
தமிழ், தமிழினம், தமிழ் தேசியம், தமிழ்
கலாச்சாரம், தமிழ்
பண்பாடு என்றெல்லாம் கூவினால்
நரம்பு புடைக்கும்
உங்களுக்கு சாதி ஒழிப்பு,
சாதி மறுப்பு என்று பேசினால் மட்டும்
மோடியின் கசப்பு மருந்தைப் போல
குமட்டுகிறதே ஏன்?
நீங்கள் தமிழர்களாக
ஒன்றுபடுவதற்கு முன் மனிதர்களாக
ஒன்றிணையும் வழியைப் பாருங்கள்.
மதவெறி என்கிற
முகத்தை வளர்ச்சி என்கிற முகமூடிப்
போட்டு மறைக்கிற மோடிக்கும்
சாதிவெறி என்கிற முகத்தை தமிழ்
கலாச்சாரம் என்கிற
முகமூடி போட்டு மறைக்கிற
உங்களுக்கும் ஆக பெரிய என்ன
வித்தியாசமிருக்கிறது? முதலில் உங்கள்
குரல் சாதி ஒழிப்புக்காய்,
சாதி மறுப்புக்காய் உரக்க ஒலிக்கட்டும்.
சாதி கலாச்சாரத்தை குழி தோண்டி புதைத்துவிட்டு சாதியற்ற
சமூகத்தை கட்டியெழுப்ப என்ன
செய்யலாமென்பதை முன்னெடுங்கள்.
ஆம், அப்போது நாங்களும் இணைவோம்
தமிழ் கலாச்சாரம் காக்கப்பட
வேண்டுமென, வேட்டி எங்கள்
பாரம்பரியம்,
அதற்கு உரிமை வேண்டுமென!
அதுவரை நாங்கள் அறிந்தே இருக்கிறோம்
தமிழ்
கலாச்சாரமென்பதே எங்களை சவக்குழிக்குள்
அடக்கம் செய்கிற சாதி கலாச்சாரம் தான்
என்பதை! மோடிகள் எந்த வடிவில்
நின்றாலும் அதை ஒருபோதும்
ஆதரிக்கப்போவதில்லை!
- லியோ

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற ஜாதி வெறியன் - பதில்

பசும்பொன் முத்துராமலிங்கம் குறித்த
பதிவுகளில் நண்பர் ஒருவர் சில
கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.

கேள்வி 1 : (திருமாவளவன்
முத்துராமலிங்கத்தை வணங்குவது போல
ஒரு புகைப்படத்தை பகிர்ந்து )
திருமாவளவன்
தேவரை வணங்கியிருக்கிறார்.
அப்படியெனில் திருமாவளவன்
முட்டாளா?

கேள்வி 2 : தேவர் ஃபார்வர்டு பிளாக்
கட்சியின் முன்னாள் தலைவர். அவர்
திரு. இமானுவேலைக் கொன்றாரா?
கேள்வி 3: தேவர் மீது அக்காலத்தில்
ஏதேனும் FIR போடப்பட்டிருக்கிறதா?
அரசு ஆவணக்
குறிப்பை பற்றி பகிருங்கள்.

# இந்த கேள்விகள்
மூன்றிற்குமே பதிவிலேயே மிக
தெளிவான பதில் இருக்கிறது. மீண்டும்
மீண்டும் பதிவை நிதானமாக
படித்துவிட்டு கேள்வியெழுப்புங்கள்
என்று கூறிய பின்னும், தேவரைப்
பற்றி எப்படி இப்படி எழுதலாமென
சிலருக்கு கொதிப்புதான்
எழுகிறதே தவிர கொஞ்சமும்
மூளைக்கு வேலை தந்தால்
தேய்ந்துவிடுமோ என
அஞ்சுவதாகவே தெரிகிறது.

முதல் கேள்விக்கு வருவோம்.
திருமாவளவன் பற்றி பதிவில் எதுவும்
இல்லையென்பதால் அதற்கான
பதிலை மட்டும் இங்கே பகிரலாமென
நினைக்கிறேன். திருமாவளவன் தேவர்
படத்தை வணங்கியிருக்கிறாரே, அவர்
நல்லவரில்லை என
எப்படி சொல்கிறீர்கள் என்பதுதான்
கேள்வி

கேள்விக்கான பதில் எளிதிலும் எளிது.
திருமாவளவன் ஓர் அரசியல்வாதி.
அரசியல்வாதிகளின் நேர்மையும்
உண்மை தன்மையும் நாம் அறிந்த
ஒன்று தான். தேவரை வணங்கினால்
நாலு ஓட்டு விழுமெனில்
அவருக்கு நாப்பதாயிரம்
செலவு செய்து கும்பாபிஷேகமே செய்வார்கள்.

திருமாவளவன் ஆதரிக்கிறார்
என்பதற்காகவே ஒருவருக்கு அப்பழுக்கற்றவர்
என பட்டம் கட்டிவிட முடியாது.
இதே பதிவில் இன்னொரு நண்பர்
இதையொட்டிய
கேள்வி ஒன்றை கேட்டிருந்தார்.
முத்துராமலிங்கம் இந்தளவிற்கு சாதிய
விஷத் தன்மை உடையவர் எனில்
இதெல்லாம் நம்முடைய
முதல்வருக்கு தெரியாதா? அவர்
ஆண்டுதோறும் தேவர்
பூஜைக்கு செல்கிறாரே, அவருக்கு தங்க
கவசமெல்லாம் அணிவிக்கிறாரே ,
அது ஏன் என்பது தான் கேள்வி.

அது ரஜினி படமென்று நினைக்கிறேன்.
வினு சக்கரவர்த்தி தேர்தலில்
நிற்கும்போது ரஜினி அவரை தன்
குப்பத்திற்கு அழைத்து வருவார்.
பன்றிகள் கூட
கூச்சப்படுமளவிற்கு தெருவெல்லாம்
சகதியும் சாக்கடையுமாக இருக்கும்.
அதிலும் ஓட்டு வேண்டுமென்பதற்காக
வேட்டியோடு எல்லோருக்கும்
கூழைக்கும்பிடு போட்டு வாக்களிக்க
சொல்லி கேட்பார் வினு சக்கரவர்த்தி.

ஆம், அரசியல்வாதிகளுக்கு ஓட்டு தான்
தேவையாயிருக்கும்போது
அவர்களுக்கு இப்படியான
"சாக்கடைகள்"
கண்ணுக்கு தெரிவதில்லை. சில
வருடங்களுக்கு முன்பு திருமாவளவனும்
ராமதாஸும்
கொஞ்சி குலாவி கூடியிருந்தது தெரியும்
தானே!

திருமாவளவனே ராமதாஸை அண்ணா அண்ணா என்று உச்சி முகர்ந்தது மட்டுமில்லாமல்
ராமதாஸுக்கு அம்பேத்கர் விருதையும்
கொடுத்திருக்கிறார் என்பதற்காக
ராமதாஸ் அப்பழுக்கற்றவராகிவிட
முடியுமா? இல்லை ராமதாஸின்
சாதி வெறியைத் தான்
விமர்சிக்கவே கூடாதா?

திருமாவளவன்
திமுகவோடு கூட்டணி அமைத்த
ஒரே காரணத்திற்காக கருணாநிதியின்
தப்பு தாளங்களுக்கெல்லாம்
ஒத்தூதினாரே, அதற்காக
கருணாநிதி நேர்மையானவராகிவிட
முடியுமா? அரசியல்வாதிகள்
ஓட்டு பிச்சை எடுக்க தேர்தல் களத்தில்
நிற்கும்போது பல
சமரசங்களை செய்து கொள்கிறார்கள்.

இன்னும் சொல்லப்போனால் இத்தகைய
சமரசங்களும்
சந்தர்ப்பவாதங்களுமே அவர்களின்
பிரதானக்கொள்கைகளாக
அமைந்துவிடுகின்றன.

விடுதலை சிறுத்தைகள் கட்சி யும்
ஒரு அரசியல் கட்சி, திருமாவளவனும்
ஒரு அரசியல்வாதி என்றவகையில்
அவரும் இந்த மதிப்பீட்டிற்கு மிக்கவராக
இதுவரை தன்
செயல்பாடுகளை அமைத்துக்கொள்ளவில்லை
என்பதே உண்மை.

மற்ற இரு கேள்விகளுக்கும்
பதிவிலேயே தெளிவான பதில்
இருக்கிறது. மீண்டும்
அதையே இங்கு மீள்பதிவிட
விருப்பமில்லை. காமராசர் போன்ற
தேசிய தலைவர்களை நாடார்
சாதி என்ற குறுகிய வட்டத்துக்குள்
அடைக்கிற நாம் தான்,
முத்துராமலிங்கம் என்ற
சாதி வெறியனை தேசிய தலைவராக
பிம்பத்தை கட்டியமைக்கிற
வேலையையும் செய்கிறோம்.

இமானுவேல்
அவர்களை முத்துராமலிங்கம்
நேரடியாக
குத்தி கொலை செய்யாதிருக்கலாம்.
ஆனால் அந்த கொலையின்
முழு சூத்திரதாரி முத்துராமலிங்கம்
தான். அவருடைய சாதிவெறியூட்டும்
பேச்சுகளே அந்த
கொலையை செய்யவைத்தன
என்பது எள்ளளவும் மறுக்கப்பட
முடியாத உண்மை.

முத்துராமலிங்கம்
பற்றி எழுதிக்கொண்டே போகையில்
வினவில் படித்த
( வினவு என்றாலே இங்கு எரிச்சலும்
குமைச்சலுமாய் இருக்கும்.
தேசத்துரோகிகளான வினவுக்காரர்கள்
எழுதுவதையெல்லாம்
படிப்பவனை போய் நம்முடைய ஃப்ரண்ட்
லிஸ்ட்டில் சேர்த்துவிட்டோமே என
விசனப்படுகிறவர்களும்
இருக்கத்தானே செய்கிறார்கள். அதற்காக
ஒன்றும் செய்ய முடியாது! )
மோடி குறித்த
கட்டுரை ஒன்று நினைவிற்கு வருகிறது.

மோடியின் தேர்தல்
வெற்றி குறித்து அலசிய
அக்கட்டுரையில் மோடி தனது தேர்தல்
பிரச்சாரங்களின் போது இந்து,
இந்துத்துவா என்ற
வார்த்தைகளை ஓரிடத்திலும்
பிரயோகிக்காமலேயே எவ்வாறு மக்கள்
திரளிடம் இந்துத்துவ உணர்வை எழுப்ப
முடிந்தது என்று விளக்கப்பட்டிருந்தது.
வளர்ச்சி, தேச பக்தி என்ற பிம்பத்துக்குள்
ஒளிந்தபடியே எவ்வாறு மதவெறியை மோடியால்
தூண்ட
முடிந்ததோ அப்படியே முத்துராமலிங்கமும்
தேசியம் பேசியபடியே மக்களுக்குள்
சாதி வன்மத்தைக் கிளறிவிட்டு அதில்
குளிர்காய்ந்தவர். மற்ற எந்த அரசியல்
தலைவருக்குமே இல்லாத
பெருமை ஒன்று முத்துராமலிங்கத்துக்­
கு மட்டுமே உண்டு.

அது முத்துராமலிங்கம்
பேசினாலே சாதிக் கலவரம்
தலை விரித்தாடுகிறது என்பதால்
அன்றைய அரசு அவர்
பிரச்சாரத்தின்போது பேசவேக்கூடாதென
அவருக்கு வாய்ப்பூட்டு போட்டது.
உண்மைகளை இன்னும்
எத்தனை காலத்திற்குத்தான்
திரித்துக்கொண்டிருப்பீர்கள்?
வெளிச்சத்திற்கு வாருங்கள் தோழர்களே!

டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 17

http://www.thamizhagam.net/thamizhagam/elibrary/Dr%20B%20R%20Ambedkar/Dr%20Ambedkar%20Books%20Vol%2017.pdfhttp://www.thamizhagam.net/thamizhagam/elibrary/Dr%20B%20R%20Ambedkar/Dr%20Ambedkar%20Books%20Vol%2017.pdf

டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 12

http://www.thamizhagam.net/thamizhagam/elibrary/Dr%20B%20R%20Ambedkar/Dr%20Ambedkar%20Books%20Vol%2012.pdfhttp://www.thamizhagam.net/thamizhagam/elibrary/Dr%20B%20R%20Ambedkar/Dr%20Ambedkar%20Books%20Vol%2012.pdf

டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 11

http://www.thamizhagam.net/thamizhagam/elibrary/Dr%20B%20R%20Ambedkar/Dr%20Ambedkar%20Books%20Vol%2011.pdfhttp://www.thamizhagam.net/thamizhagam/elibrary/Dr%20B%20R%20Ambedkar/Dr%20Ambedkar%20Books%20Vol%2011.pdf

டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 10

http://www.thamizhagam.net/thamizhagam/elibrary/Dr%20B%20R%20Ambedkar/Dr%20Ambedkar%20Books%20Vol%2010.pdfhttp://www.thamizhagam.net/thamizhagam/elibrary/Dr%20B%20R%20Ambedkar/Dr%20Ambedkar%20Books%20Vol%2010.pdf

டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 9

http://www.thamizhagam.net/thamizhagam/elibrary/Dr%20B%20R%20Ambedkar/Dr%20Ambedkar%20Books%20Vol%207.pdfhttp://www.thamizhagam.net/thamizhagam/elibrary/Dr%20B%20R%20Ambedkar/Dr%20Ambedkar%20Books%20Vol%209.pdf

டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 7

http://www.thamizhagam.net/thamizhagam/elibrary/Dr%20B%20R%20Ambedkar/Dr%20Ambedkar%20Books%20Vol%207.pdfhttp://www.thamizhagam.net/thamizhagam/elibrary/Dr%20B%20R%20Ambedkar/Dr%20Ambedkar%20Books%20Vol%207.pdf

டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 6

http://www.thamizhagam.net/thamizhagam/elibrary/Dr%20B%20R%20Ambedkar/Dr%20Ambedkar%20Books%20Vol%206.pdf

http://www.thamizhagam.net/thamizhagam/elibrary/Dr%20B%20R%20Ambedkar/Dr%20Ambedkar%20Books%20Vol%206.pdf

டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 5

டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 4

http://www.thamizhagam.net/thamizhagam/elibrary/Dr%20B%20R%20Ambedkar/Dr%20Ambedkar%20Books%20Vol%204.pdfhttp://www.thamizhagam.net/thamizhagam/elibrary/Dr%20B%20R%20Ambedkar/Dr%20Ambedkar%20Books%20Vol%204.pdf

சனி, 1 நவம்பர், 2014

டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 3

http://www.thamizhagam.net/thamizhagam/elibrary/Dr%20B%20R%20Ambedkar/Dr%20Ambedkar%20Books%20Vol%203.pdfhttp://www.thamizhagam.net/thamizhagam/elibrary/Dr%20B%20R%20Ambedkar/Dr%20Ambedkar%20Books%20Vol%203.pdf

டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 2

http://www.thamizhagam.net/thamizhagam/elibrary/Dr%20B%20R%20Ambedkar/Dr%20Ambedkar%20Books%20Vol%202.pdfhttp://www.thamizhagam.net/thamizhagam/elibrary/Dr%20B%20R%20Ambedkar/Dr%20Ambedkar%20Books%20Vol%202.pdf

அண்ணல் அம்பேத்கரின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் ஆங்கிலம்

http://www.thamizhagam.net/thamizhagam/elibrary/Dr%20B%20R%20Ambedkar/Ambedkar%20Books.pdfhttp://www.thamizhagam.net/thamizhagam/elibrary/Dr%20B%20R%20Ambedkar/Ambedkar%20Books.pdf

சாதி ஒழிப்பு

http://www.thamizhagam.net/thamizhagam/elibrary/Dr%20B%20R%20Ambedkar/SAthi%20Ozhippu.pdfhttp://www.thamizhagam.net/thamizhagam/elibrary/Dr%20B%20R%20Ambedkar/SAthi%20Ozhippu.pdf

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சாதி ஒழிப்பு நூல்