வியாழன், 8 அக்டோபர், 2015

வைகோ ஆதரவு பெரியாரிஸ்டுகளும் (?) ஈழமும்

வைகோ ஆதரவு பெரியாரிஸ்டுகள் என்ற சொற்பதத்தை படித்ததும் என்னால் நகைக்காமல் இருக்க முடியவில்லை. வைகோ வை எனக்கு பிடிக்கும், பிடிக்காது என்பதல்ல விஷயம். ஆனால் வைகோ பெரியாரிஸ்டுகள், கருணாநிதி பெரியாரிஸ்டுகள், பிரபாகரன் பெரியாரிஸ்டுகள் என்றெல்லாம் பிராண்டட் பெரியாரிஸ்டுகளை பார்க்கும் போது நகைப்பதை தவிர வேறென்ன செய்ய முடியும்?
ஒரு பகுத்தறிவாளனுக்கு மக்கள் பற்றை தவிர, இனம், மொழி, தேசியம் குறித்த பற்றெல்லாம் அறவே கூடாது என்கிறார் பெரியார். இதன் பொருள் பகுத்தறிவாளன் நாட்டைப் பற்றியோ, இனம் , மொழி பற்றியோ கொஞ்சமும் கவலைப்படக்கூடாது என்பதோ அவைகளைப் பற்றி சிந்திக்க கூடாதோ என்பதல்ல. எந்த ஒரு செயலும் மக்களை , மக்கள் நலனை மட்டுமே முன்னிலைப்படுத்தி தான் அமைய வேண்டும் என்பதே.
ஆபாச புராண, இதிகாச கதைகளின் குப்பையாக காணப்படுகிற தமிழ் இலக்கியங்களை கண்டித்த தந்தை பெரியார் தான், மக்கள் எளிதாக பயன்படுத்தும்படி மாபெரும் தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை கொண்டு வந்தார். காங்கிரசை மிக கடுமையாக எதிர்த்த பெரியார் தான், காமராஜரை ஆதரிக்கும்படி மக்களிடம் பிரச்சாரம் செய்தார். ஒன்றை எதிர்ப்பதாயினும், ஆதரிப்பதாயினும் மக்கள் நலனை மட்டுமே கண்முன் கொண்டு சிந்தித்தனால் மட்டுமே பெரியாரால் அப்படி செயல்பட முடிந்தது. பகுத்தறிவாளனின் இயல்பும் அழகும் அது தான்.
ஆனால் கடவுள் மறுப்பை மட்டுமே பகுத்தறிவாக, பெரியாரிசமாக முன்னெடுப்பவர்கள் தான் நாளடைவில் ஏதேனும் ஒரு தனிநபர் ஆதரவு நிலையெடுத்து பிராண்டட் பெரியாரிஸ்டுகளாய் உருவெடுக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் தங்களை பெரியாரிஸ்டுகளாய் காட்டிக்கொண்டே, பெரியாரியக் கொள்கைகள் நீர்த்துபோகச் செய்யும் வேலையையும் இவர்கள் செவ்வனே செய்கிறார்கள்.
பெரியாரை படித்தவருக்கு அம்பேத்கர் அந்நியமாய் பட நியாயமில்லை. அம்பேத்கரைப் படித்தவருக்கு பெரியார் அந்நியமாய் பட நியாயமில்லை. இருவரது நோக்கமும் கொள்கையும் ஒன்றாகவே இருந்தது. ஆனால் தங்களை பெரியாரிஸ்டுகள் என்று சொல்லிக்கொள்கிற சிலர் திட்டமிட்டே அண்ணல் அம்பேத்கரை புறக்கணிக்கிறார்கள், ஒதுக்கி வைக்கிறார்கள். தங்களை அம்பேத்கரிஸ்டுகள் என்று காட்டிக்கொள்கிற சிலர் , தந்தை பெரியாரை தலித் மக்களின் விரோதி என சித்தரிப்பதில் முனைப்பு காட்டுகிறார்கள்.
பெரியாரையும் அம்பேத்கரையும் ஒருவர் மாற்றி ஒருவர் புறக்கணிக்கிற இவர்கள், பிரபாகரன் என்று சொன்னால் மட்டும் கூட்டாக சேர்ந்து காவடி தூக்க முண்டியடிக்கிறார்கள். கடவுளேயாயினும் கேள்வி கேட்ட பூமியில் கடவுளுக்கும் மேலானவராக பிரபாகரனை உயர்த்தி , எல்லா விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்டவராக அவரை காக்க துடிக்கிறார்கள்.
பிரபாகரன் பெயரோடு வாழ்க என்பதை தவிர வேறு எதை சேர்த்து சொன்னாலும் உடனடியாக தமிழின துரோகி பட்டம் கட்டி தங்கள் தமிழினப் பற்றை பறை சாற்றுகிறார்கள். ஆனால் மூச்சுக்கு முன்னூறு முறை இவர்கள் உச்சரிக்கிற தமிழினப் பற்றை அலசிப்பார்த்தால் ஒரே சாதி வெக்கையாக இருக்கிறது.
கடல்கடந்து இருக்கிற இலங்கை நாட்டில் சிங்கள ஆதிக்கவாதிகள் தமிழர்களை கொடுமைப்படுத்தி கொன்று குவிக்கிறார்கள், தமிழீழம் வேண்டும், ஒழிக சிங்கள பவுத்த ஆதிக்கம், வளர்க தமிழ் தேசியம் என்று கூவி தங்கள் இனப்பற்றை காட்ட தெரிந்தவர்களுக்கு இங்கே, இதே நாட்டில், இதே ஊரில், இதே தெருவில் நடக்கிற எதுவும் காதுக்கு எட்டுவதுமில்லை, கண்ணுக்கு புலனாவதுமில்லை.
ஆதிக்க சாதி வெறியர்களின் திட்டமிட்ட வன்முறைகளால் ஆண்டாண்டு காலமாக அடிப்பட்டு மிதிப்பட்டு கிடக்கும் தாழ்த்தப்பட்ட மக்களின் கண்ணீரோ கூக்குரலோ அவர்களுக்கு அந்நியமாய் படுகிறது. எதுவெல்லாம் ஈழத்தில் நடக்கும் அநீதி என பொங்குகிறார்களோ அவைகளை மிஞ்சிய அநீதிகள் இங்கும் தினந்தோறும் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. எவையெல்லாம் ஈழத்திற்கு தேவையோ, அதே சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் வேண்டிதான் இங்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். எல்லை தாண்டி நீளும் உங்கள் இரக்கம் மிகுந்த கைகள், எதிரே வீழ்த்தப்படுகிற தாழ்த்தப்பட்டவனைக் கண்டால் மட்டும் முடக்கிக்கொள்கிறது.
தங்களை அம்பேத்கரிஸ்டுகள், தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக குரல் கொடுப்பவர்கள் என்பவர்களும் பிரபாகரனைக் கொண்டாடுவதில் காட்டும் முனைப்பை தந்தை பெரியாரை கொண்டாடுவதில் காட்டுவதில்லை.
ஆதிக்க சாதியினர் பிரபாகரனை, தமிழ் தேசியத்தை கொண்டாடுவதில் லாபமிருக்கிறது. தமிழராக இணையுங்கள் என்று கூவிக்கொண்டே தங்களின் சாதி அக்கிரமங்களை மூடி மறைக்க அல்லது பங்காளி சண்டை என்று அதை நியாயப்படுத்திக்கொள்ள பிரபாகர முகமூடி அவர்களுக்கு பெரிதும் உதவுகிறது.
ஆனால் தன் மண்ணில் சாதிக்க முடியாத சமத்துவத்தை, சுதந்திரத்தை , சகோதரத்துவத்தை ஈழத்தில் மட்டும் சாதித்துவிட முடியுமென முஷ்டி உயர்த்துவது அப்பட்டமான , மக்களை ஏமாற்றும் அயோக்கியத்தனம்.
திமுகவை எதிர்க்கிற தமிழ்தேசியவாதிகள் கூட வைகோவிடம் தங்கள் திராவிட எதிர்ப்பை மூட்டை கட்டி வைத்துவிட்டு வாலை குழைக்க அவரின் ஆதிக்க சாதிக்கு ஆதரவான தமிழ்தேசிய பற்றும் காரணம்.
பிரபாகரன், வைகோ, ஜெயா, கருணாநிதி என எந்த தனிப்பட்ட நபர் ஆதரவு நிலை கொண்டும் பகுத்தறிவாளனாய் இருக்க முடியாது. தனி நபர் துதி மதியை மழுங்கடிக்கிற யுக்தி. பிரபாகரனை கொண்டாடுங்கள், ஆனால் அந்த கொண்டாட்டங்களினால் இங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சிறு துளி நன்மையுமில்லை. ஆனால் தந்தை பெரியாரையும் அண்ணல் அம்பேத்கரையும் ஒரு சேர முன்னெடுப்பது பார்ப்பனியத்திற்கெதிரான மாபெரும் ஆயுதம். நீங்கள் யார் என்பதை பகுத்தறிவின் துணைகொண்டு நீங்களே சிந்தித்து முடிவு செய்யுங்கள்.
- லியோ

முதலீட்டாளர்கள் மாநாட்டை விமர்சிப்பது காழ்ப்புணர்ச்சியா?

முதலீட்டாளர்கள் மாநாட்டை விமர்சிப்பது காழ்ப்புணர்ச்சியா?
ஒரு மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு முதலீடுகள் கட்டாயம் தேவை என்பதில் எந்த மாற்று கருத்துமில்லை. அதற்காக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி தங்கள் மாநிலத்திலுள்ள சாதக அம்சங்களை முதலீட்டாளர்களுக்கு விளக்க வேண்டியதும் அரசின் கடமை. ஆனால் இந்த மாநாடு நடைபெற்ற காலமும் விதமும் அதன் நோக்கமும் தான் முகம் சுளிக்க வைக்கிறது.
ஆளும் அரசிற்கு உண்மையிலேயே மாநிலத்தின் வளர்ச்சியில் அக்கறை இருந்திருக்குமேயானால் ஆட்சிக்கு வந்த முதல் இரு ஆண்டுகளில் இப்படியான முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி முதலீடுகளைப் பெற்று அடுத்த மூன்று ஆண்டுகளில் அழகான தொடக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால் நடந்தது என்ன?
முதல் சில ஆண்டுகளும் 110விதியின் கீழ் அறிவிப்புகள் வெளியிடுவதை மட்டுமே ஜெ தனது ஆட்சியின் முழுநேர வேலையாகக் கொண்டிருந்தார். அப்படி வெளியிடப்பட்ட அறிவிப்புகள் யாவும் கோப்புகளிலேயே முடங்கி கிடக்கின்றன. அடுத்த ஒரு வருட ஒ.பன்னீர்செல்வத்தின் ஆட்சியைப் பற்றி சொல்லவே வேண்டாம். கொட்டாவி விடக் கூட ஜெ கை காட்டினால்தான் ஆச்சு எனுமளவிற்கு பவ்ய பன்னீராக உலாவந்தார். பட்ஜெட் கூட்ட தொடர் கூட பத்திரிக்கைகள் காறி உமிழ்ந்த பிறகு தான் வேண்டா வெறுப்போடு கூட்டப்பட்டது. மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறாத காரணத்தால் எல்லா துறைகளும் முற்றாகவே முடங்கி போயின.
அப்போதே நடக்க வேண்டி திட்டமிடப்பட்டிருந்த முதலீட்டாளர்கள் மாநாடு ஜெ மீண்டும் கோட்டை வந்த பின் நடத்த வசதியாக மே மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது. குமாரசாமி கணக்கால் மீண்டும் கோட்டைக்கு வந்த ஜெ வின் உடல்நிலைப் பற்றி பல்வேறு யூக செய்திகள் வெளிவந்தன. அரசு சார்பிலேயே அவருக்கு உடல்நலம் சரியில்லை என அறிக்கை வெளியிடப்பட்டது.
மே மாதம் நடக்கவிருந்த மாநாடும் செப்டம்பருக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அவரின் உடல்நிலையை காரணம் காட்டாமல் மே மாத வெயில் காரணமாக தள்ளிவைக்கப்பட்டதாக செய்தி வெளியிடப்பட்டது. இதைத்தான் கலைஞர் தனக்கேயுரிய பாணியில், மே மாதம் வெயிலடித்தால் செப்டம்பரில் மழையடிக்குமே என அப்போது கிண்டல் செய்திருந்தார்.
ஆட்சி முடிய இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் இப்போது கூட்டப்பட்டிருக்கும் இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டால் நமது மாநிலத்திற்கு என்ன பயன்? மாநாடு நடத்தி, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, அது நடைமுறைக்கு வரும்போதுதான் உண்மையான முதலீடு எவ்வளவு என்பது தெரியவரும். கிடப்பில் கிடக்கிற பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களே இதற்கு சாட்சி.
இனிமேல் ஆட்சி முடிவதற்கு முன் உடனடியாக எந்த முதலீடும் வர வாய்ப்பில்லை. முதலீட்டாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்த சசிகலா தன்னிடமுள்ள கருப்பு பணத்தை தனது பினாமிகள் மூலம் கொட்டி தொழில் தொடங்கினால் தான் ஆச்சு. ஆனால் இந்த மாநாட்டை ஆட்சியின் தொடக்கத்தில் நடத்தியிருந்தால் இதன் பாதையே வேறு.
ஆனால் இப்போது தேர்தல் காலத்தில் இத்தனை லட்சம் கோடி முதலீடு என வெற்று பம்மாத்து காட்டி மக்கள் தலையில் மஞ்சள் அரைக்க மட்டும் தான் இந்த மாநாடு உதவும் . ஏதோ அதிமுக கட்சி மாநாடு போல கொடி தோரணங்களோடு முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி முடித்திருப்பவர்களை நினைத்தால் ஒரு படத்தில் வடிவேலு தனது டவுசர் பாக்கெட்டுகளில் கைவிட்டு உள்துணியை இழுத்துக்காட்டி , ஒண்ணுமில்லையே என ஒய்யாரமாக நடந்து போகிற காட்சிதான் நினைவுக்கு வருகிறது.

அரசியல் பேசுவோம்: விசிக விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதா?

அரசியல் பேசுவோம்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரில்லை தான். ஆனால் அவரை விமர்சிப்பவர்களின் உள்நோக்கம் வெள்ளிடைமலையாக தெரிகிறது.
ஆதிக்க சாதியினரின் விமர்சனங்களில் , இவனால் தானே இந்த பற பயலுவலாம் நமக்கு சமமா அரசியல் செய்ய, பேச செய்கிறார்கள் என்ற ஜாதி வன்மமும் சில தாழ்த்தப்பட்ட பிரிவினர்களின் விமர்சனங்களில் தங்கள் சொந்த சாதியின் மீதான சுய ஜாதி போதையும் தான் பீய்ச்சியடிக்கிறது.
மற்றபடி தலைவர் திருமாவளவனை விமர்சிக்கும் முன், அவருக்கு மாற்றாக , அவரைவிட எல்லா வகையிலும் சிறந்த ஒரு தலைவரை அடையாளம் காட்ட முடிகிறதாவெனில், இல்லை.
இன்று என்னைப் போன்ற சாதாரண பாமரன்களும் அரசியல் பேச முடிகிறதெனில் அதற்கு அண்ணல் அம்பேத்கரின் ஒளியை சேரி இருட்டில் பாய்ச்சிய தலைவர் திருமாவளவன் தான் காரணம்.
விடுதலை சிறுத்தை கட்சிகளின் நிறை குறைகளோடு தான் அதனை ஆதரிக்கிறோம். எங்களுக்கு தெரியும் இது போதுமானதல்ல என்று. ஆனால் நாங்கள் கரையேற இந்த துரும்பை விடவும் இப்போது வேறு மாற்று இல்லை எனும் போது அதை இறுகப் படிப்பதே எங்கள் அறிவார்ந்த பாதையாக இருக்க முடியும்.
தலைவர் திருமாவளவன் ஐந்து ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என சிலர் குற்றப்பட்டியல் வாசிக்கிறார்கள். சமூக நீதி, சமத்துவம் பேசி பல ஆண்டுகளாக மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சிப் பொறுப்பில் இருந்த திராவிடக் கட்சிகளால் பட்டியலின மக்களுக்கு மிஞ்சியது துரோகம் மட்டுமே.
திராவிடத்திற்கு மாற்று என கூவும் தமிழ்தேசியவாதிகளின் சாதி நோய் முற்றி நாற்றமெடுத்து ஓட வைக்கிறது. அப்படி இருக்க எங்களுக்கான எங்கள் விடுதலையை நாங்கள் தான் போராடி வெல்ல வேண்டும் என்ற நிதர்சனத்தை உணர்ந்தே இருக்கிறோம்.
எந்த குறிப்பிட்ட சாதியையும் தன் அடையாளப்படுத்தாமல் ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் ஏன் இதர பிற்படுத்தப்பட்ட , முன்னேறிய சாதிகளின் பெயரால் கட்சி நட த்துகிற தலைவர்களின் வஞ்சிப்பிற்கு உள்ளாகிற மக்களுக்காகவும் சேர்த்தே பாடுபடுகின்ற ஒரே இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டும் தான்.
எங்கள் கைகளை ஒன்றிணைத்து அதை பலப்படுத்துவது தான் எங்கள் முன் உள்ள பணியே அல்லாமல் நீலி கண்ணீரோடு தலைவர் திருமாவளவனை எங்களிடமிருந்து அந்நியப்படுத்திவிடலாம் என எண்ணி பொய்யுரைகளை புழுதிவாறி தூற்றினால் நாங்கள் மயங்கி போவோம் என எண்ணியிருப்பின், உங்களுக்கு பரிசளிக்க எங்களிடம் ஏமாற்றம் மட்டுமே இருக்கிறது.

விசிக சாதி கட்சியா?

விசிக சாதி கட்சி?
வீர பறையர்களே! வீர பள்ளர்களே! வீர சக்கிலியர்களே! ஒன்றிணையுங்கள் என்று விசிக எப்போதாவது கூவி அழைத்ததா?
நாம் ஆண்ட சாதி, பேண்ட சாதி என சாதி மலத்தை கரைத்து வாயிலூற்றி போதை ஏற்றியதா?
சொந்த சாதிக்குள்ளேயே மணம் முடியுங்கள் என்று சாதி தூய்மை பேசியதா?
எந்த வகையில் விசிக சாதி கட்சி? தலித் மக்களுக்காக பாடுபடுவதாலா? சாதி ஒழிப்பு தான் உங்கள் நோக்கமெனில் நசுக்கப்படுபவனை நோக்கியல்லவா உங்கள் கரம் நீள வேண்டும்?
அதெப்படி நீ சாதியை ஒழிக்க சொல்லலாம்? சாதி ஒழிப்பை பேசினாலும் சாதி கட்சி தான், நீ வாயை மூடிகிட்டு சும்மா இரு, நாங்க ஏறி மிதிச்சுட்டே இருப்போம் ன்றது தான் உங்க சமூக நீதியா?
நடுநிலை என்பது கைகட்டி வேடிக்கை பார்ப்பது அல்ல. நியாயத்தின் பக்கம் நிற்பது, அநீதியை துணிவுடன் எதிர்ப்பது. ஆனால் இவையெதையும் செய்ய தயாராக இல்லை நீங்கள்.
உங்கள் நோக்கமெல்லாம் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக யாரும் குரல் கொடுக்க கூடாது, அவர்கள் இப்படியே சாதி அடிமைகளாகவே தொடர வேண்டும் என்பதாகவே இருக்கிறது.
அதனால் உங்களால் சமூக நீதியை வாய்கிழிய மேடைகளில் முழங்கிக்கொண்டே, சாதி ஒழிப்பை, சமத்துவத்தை, மனித சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ஒரு இயக்கத்தை சாதி முத்திரை குத்தி ஒடுக்கவும் முடிகிறது.
இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...

விஷ்ணுபிரியா (தற்)கொலை வழக்கு: படுகொலை செய்யப்படும் உண்மைகள்

படுகொலை செய்யப்படும் உண்மைகள்!
" வன்னிய சாதிவெறிக்கு பலி இளவரசன்..
கவுண்ட சாதிவெறிக்கு பலி கோகுல்ராஜ்..
அரசு மற்றும் அதிகாரிகளின் சாதிவெறிக்கு பலி டிஎஸ்பி விஷ்ணுபிரியா... "
ஜெ வின் அதிமுக அரசில் கொலை, கொள்ளை, செயின் பறிப்பு, பாலியல் வன்முறை எல்லாமும் லைசன்ஸ் தேவைப்படாத அல்லது காவல்துறை மற்றும் அரசியல்வாதிகளின் மறைமுக லைசன்ஸ் பெற்ற தொழில்களாகிவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன் தர்மபுரி இளவரசன் ரயில்வே தண்டவாளத்தில் மர்மமான முறையில் சவமாக கண்டெடுக்கப்பட்ட போது அது குறித்து பத்திரிகைகள் பக்கம் பக்கமாக எழுதின. தடயவியல் நிபுணர்கள் சிலர் , ஒரு தற்கொலை என்பதற்கான எந்த அறிகுறியும் இளவரசன் விஷயத்தில் காணப்பட வில்லை என்பதை பல்வேறு லாஜிக்கல் பாயிண்ட்டுகளோடு விளக்கியுமிருந்தார்கள். ஆனாலும் அதன் பின் என்ன நடந்தது என்பது அனைவரும் அறிந்ததே. இளவரசன் படுகொலை தற்கொலையாக சோடிக்கப்பட்டு வழக்கு இழுத்து மூடப்பட்டு உண்மை சவக்குழியில் புதைக்கப்பட்டது.
இளவரசன் படுகொலையில் ஊரறிந்த கொலையாளிகள் சாதி ஆதரவு அரசின் ஆசியோடு தப்பவிடப்பட்டதே அதே மாதிரியான மற்றொரு படுகொலையை அரங்கேற்றும் தைரியத்தை சாதி வெறி கொலையாளிகளுக்கு தந்தது எனில் அது கொஞ்சமும் மிகையல்ல. இளவரசனைக் கொன்ற அதே வழிமுறையில் கோகுல்ராஜும் கொல்லப்பட்டு தண்டவாளத்தில் வீசப்பட்டார். ஐஎஸ் தீவீரவாதிகள் தங்களிடம் பிணைய கைதியாக பிடிபட்ட ஒருவரை கழுத்தை அறுத்து கொல்வதற்கு முன் அவரை பேசவைத்து வீடியோ எடுத்து வெளியிடுவது போல் கோகுல்ராஜையும் மிரட்டி வீடியோ எடுத்து தப்பித்து விடலாமென கொலையாளிகள் திட்டமிட்ட வேளையில், கோகுல்ராஜின் தோழி உண்மையை வெளிப்படுத்தியதும் கோயில் வாசலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காமிராவில் பதிவாகியிருந்த கொலையாளிகள் நடமாட்டமும் அவர்களை வேறுவழியின்றி இந்த கொலை வழக்கில் சிக்க வைத்தது.
சாதியை இறுக அணைத்து உச்சி முகர்ந்து காப்பாற்றும் சாதி அரசும் சாதி அதிகாரிகளும் நிர்பந்தத்தின்பேரில் கொலைவழககாக பதிவு செய்து, சிலரை கைது செய்தாலும், படுகொலையின் முக்கிய சூத்திரதாரி யுவராஜ் கவுண்டனை எட்டக்கூட முடியாத நிலையொன்றை காட்சியமைத்து அவனை பத்திரமாக தப்பவிட்டார்கள்.
கோகுல்ராஜ் வழக்கை உடனடியாக சிபிஐ க்கு மாற்றி உத்தரவிட வேண்டுமென அப்போதே விடுதலை சிறுத்தைகள் உட்பட்ட பல கட்சிகளும் குரல் கொடுத்தன. ஆனால் எதற்கும் ஆளும் அதிமுக அரசு கொஞ்சமும் செவி சாய்க்கவில்லை. டிஎஸ்பி விஷ்ணுபிரியா விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். விசாரணையின் போது குற்றத்தில் தொடர்பற்ற சிலரை கைது செய்ய மேலதிகாரிகளிடமிருந்து விஷ்ணுபிரியா அவர்களுக்கு தொடர் நெருக்குதல் வந்ததாக தெரிகிறது. இதன் மூலம் அப்பாவிகள் சிலரை வழக்கில் சிக்க வைத்துவிட்டு, உண்மையான குற்றவாளியான யுவராஜ் கவுண்டனை தப்பிக்க வைக்க அரசின் மேல்மட்டத்திலிருப்பவர்கள் மூலம் எடுக்கப்பட்ட முயற்சியாகவே இது தெரிகிறது. சில நாளிதழ்களில் அமைச்சர் ஒருவரின் ஆதரவில் யுவராஜ் என்ற கவுண்ட சாதி வெறியன் சென்னையில் பதுங்கி இருந்ததாகவும், பின் அதே அமைச்சரின் ஆசியோடு யுவராஜ் பெங்களூருக்கு தப்பிச் சென்றதாகவும் செய்திகள் வெளியானதையும் இங்கு நாம் நினைவு கூற வேண்டியிருக்கிறது.
டிஎஸ்பி விஷ்ணுபிரியா அவர்கள் தற்கொலை செய்து கொன்றதாக கூறப்படும் நாளன்று அவர் தன் சக துறை தோழியான தன்னுடன் (டிஎஸ்பி மகேஷ்வரி அவர்களுடன்) பேசிக்கொண்டிருந்தபோது எஸ்பி லைனில் வருவதாக சொல்லி போனை துண்டித்தார், பின் அவரிடமிருந்து எந்த தகவலுமில்லை என்பதை குறிப்பிடும் டிஎஸ்பி மகேஷ்வரி அவர்கள் , இந்த மரணத்துக்கு உயரதிகாரிகளின் டார்ச்சர் தான் காரணம் என்பதை செய்தியாளர்கள் முன் பகிரங்கமாக வெளிப்படுத்தினார். தனது உயிருக்குயிரான தோழி, பணியில் நேர்மையாக இருக்க முயன்ற ஒரே காரணத்துக்காக தனது துறை மேலதிகாரிகளின் டார்ச்சர் அவரை கொன்றுவிட்டதை அவர் கதறியழுதபடி தெரிவித்தபோது சாதி அரசாங்கம் மற்றும் சாதி அதிகாரிகளின் மேல் நமது ஆவேசமும் உண்மையை மூடிமறைக்கும் இந்த அரசின் கயமைத்தனம் மீதான கோபமும் நமக்கு ஒருசேர வெளிப்படுகிறது.
இப்போது டிஎஸ்பி விஷ்ணுபிரியா கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டிருக்கிற அரசு , கோகுல்ராஜ் கொலை வழக்கையும் அதே சிபிசிஐடி விசாரிக்கும் என அறிவித்திருக்கிறது. ஆனால் தற்கொலைக்கு முன் விஷ்ணுபிரியா அவர்கள் எழுதியதாக கூறப்படும் கடிதத்திலேயே சில பக்கங்களை எடுத்து மறைப்பவர்கள் விசாரணையை மட்டும் நேர்மையாக கொண்டு செல்வார்கள் என்பதை கனவிலும் நினைக்க முடியவில்லை. அனைத்து கட்சி மற்றும் மக்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து இந்த அரசு உடனடியாக இந்த இரு வழக்குகளையும் சிபிஐ வசம் ஒப்படைத்து உண்மைகளை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். யுவராஜ் இத்தனை நாட்களாக போலீஸிடம் சிக்காமல் தப்பிக்கும் பின்னனியில் யார் இருந்தது என்பதையும் மக்களுக்கு சொல்லியாக வேண்டும்.
மேலதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் டார்ச்சர்களால் அரசு அதிகாரிகளே தற்கொலைக்கு தள்ளப்படுவதும் ஒடுக்கப்பட்ட மக்கள் தொடர்படுகொலைகளுக்கு உள்ளாவதும் நீதியின் பக்கம் நிற்க வேண்டிய அரசு எந்திரம் சாதி அகோரப்பல் காட்டி சிரிப்பதும் த்தூ த்தூ த்தூ வென இந்த ஒட்டுமொத்த அரசின் மீதும் நம்மை காறி உமிழ வைக்கிறது. இனியேனும் இந்த அரசு நேர்மையான விசாரணைக்கு ஆவன செய்து தன் மீதான எச்சிலை துடைத்துக்கொள்ளட்டும்!
- லியோ

வைகோ திராவிட இயக்க தலைவரா?

வைகோ???
ரஜினியை நடுநிலைவாதி என்பதும் கமலை நாத்திகவாதி என்பதும் வைகோவை திராவிடக் கட்சி தலைவர் என்பதும் வேறு வேறல்ல. எல்லாமும் அப்பழுக்கற்ற கலப்படமற்ற முகமூடிகள் தான்.
திமுக வின் குடும்ப ஆதிக்கத்தை எதிர்த்து தனிகட்சி கண்ட வைகோவின் ஆரம்பம் என்னவோ ஆஹா போட வைப்பது உண்மைதான். ஆனால் அதன்பின் அவர் எடுத்த யூ டர்ன்களெல்லாம் ஊட்டி மலை ரோட்டில் கூட இல்லாத அதிசிய வகைகள் தான்.
பெரியார் மணியம்மை திருமணத்தை சாக்காக வைத்து தனி கட்சி கண்ட அண்ணா, திக வின் கடவுள் மறுப்பு கொள்கையை ஒன்றே குலம் ஒருவனே தேவன் என பார்ப்பனர் உட்பட யார் வேண்டுமானாலும் வந்து ஏறிக்கொள்கிற பொதுவண்டியாக மாற்றினார். திராவிடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகமாக கண்ட முன்னேற்றம் இது தான்.
கணக்கு வழக்கு ஒழுங்காக காண்பிக்க வில்லை என அங்கிருந்து தனி வண்டி பூட்டிய எம்ஜிஆர் பட்டவர்த்தனமான பக்திரசம் பொங்கும் கட்சியாகவே அதிமுகவை அமைத்தார். கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு எல்லாம் அதிமுக வண்டியின் முன் எலுமிச்சை கட்டி தொங்கவிடப்பட்டு முற்றாக நசுக்கப்பட்டது.
ஸ்டாலின் முன்னிலைப்படுத்தப்படுவதை கண்டித்து வெளியேறிய வைகோ, திராவிடம் என்பதை கட்சியின் பெயரில் மட்டும் வைத்துக்கொண்டு தமிழ்தேசிய கூடாரத்தில் சங்கமமானார். அவர் கண்ட மறுமலர்ச்சி சாதிய தமிழ்தேசியத்துக்கு பல்லக்கு தூக்குவதாகவே இருந்தது.
திராவிட கட்சிகளால் தான் இந்த நாடு சீரழிந்தது என பொங்கியெழுகிற தமிழ்தேசியவாதிகள் தங்களின் பிரதான எதிரியாக முன்னிலைப்படுத்துவது கருணாநிதியை மட்டும் தான். ஜெ வை கூட திராவிட லிஸ்ட்டில் வேண்டாவெறுப்பாக சேர்த்துக்கொள்கிற அவர்கள் வைகோவை அப்படி ஒருபோதும் எண்ணியதுமில்லை, பேசியதுமில்லை.
கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, பெண் விடுதலை, வர்க்க சமத்துவம் இது எதையும் முன்னிலைப்படுத்தாமல் முழுநேர பிரபாகர துதி பாடி தன்னை கடைந்தெடுத்த ஈழ வியாபாரியாக நிலைநாட்டிக்கொண்டவர் வைகோ. ரோமாபுரியிலே, கிரேக்கத்திலே, ஐரோப்பாவிலே, அமெரிக்காவிலே என்று நீட்டி முழக்க தெரிந்த வைகோவுக்கு உள்ளூர் தமிழகத்திலே ஒடுக்கப்படுகிற தமிழனை பற்றி சிந்திக்கமட்டும் நேரமிருந்ததேயில்லை.
தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் தொடர் வன்முறைகளுக்குள்ளாகி வரும் சூழலில் வைகோவின் நாக்கு சாதிக்கு எதிராய் எப்போதும் வார்த்தைகளை உதிர்த்ததேயில்லை. தமிழ்தேசியவாதிகள் சாதிய படுகொலைகளை பங்காளி சண்டைகள் என்று அடையாளப்படுத்துவதைப்போல சாதிய வன்முறைகள் அரங்கேறும்போதெல்லாம் ஆதிக்க சாதியின் குரலாகவே ஒலித்தவர் வைகோ.
அத்வானி ரதயாத்திரை மேற்கொண்டு நாடு முழுக்க ரத்த வெள்ளாறு ஓட செய்தபோது, அது குறித்த பாராளுமன்ற விவாதத்தில் ஒரு தேர்ந்த ஆர்எஸ்எஸ் காரரை போல அத்வானியின் நிலைப்பாட்டை நியாயப்படுத்தி முழங்கியவர் வைகோ. இந்த பேச்சினை அத்வானியும் வாஜ்பாயும் பாராட்டியதை தான் தனது பேச்சுதிறமைக்கான அங்கீகாரமாக முழங்குவார் மறுமலர்ச்சி திராவிட வைகோ.
ஒவ்வொரு பாராளுமன்ற தேர்தலிலும் ஓரளவேனும் சிந்தித்து தெளிவான முடிவை எடுக்கிற வைகோ, சட்டமன்ற தேர்தல்களில் மட்டும் தெளிவாகவே சிந்தித்து அதிமுகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே தொடர்ந்து எடுத்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
திராவிடத்திற்கு குழிவெட்டியவர்கள் அண்ணாவும் எம்ஜிஆரும் என்றால் அதை மண்ணிட்டு மூடிய பெருமை வைகோவுக்கு தான்.

s1

விஷ்ணு பிரியா அந்த கடிதத்தை தமிழில் எழுதினாரா, தங்கிலீஷில் எழுதினாரா என்ற தமிழ் பற்றெல்லாம் இருக்கட்டும். அதை அவர்தான் எழுதினாரா, எனில் தனது தற்கொலைக்கான காரணங்களாக விஷ்ணுபிரியா அவர்கள் குறிப்பிட்டிருப்பது என்ன? அப்படி எதையுமே குறிப்பிடாமல் டைம்பாஸ்க்காகவா லெட்டர் எழுதி தற்கொலை செய்து கொண்டார்? கடிதத்தின் சில பக்கங்கள் மறைக்கப்பட்டது ஏன்? கடைசியாக விஷ்ணுபிரியா அவர்களுடன் பேசியதாக சொல்லப்படுகிற எஸ்பி செந்தில்குமார் எது தொடர்பாக பேசினார்? யார் மீது , எதற்காக, யாரால், குண்டாஸ் போட நிர்பந்திக்கப்பட்டது? பத்து தனிப்படைகள் அமைத்தும்கூட யுவராஜ் என்ற சாதிவெறியனை இன்னும் பிடிக்காமல் இருப்பதன் பின்னனி என்ன? இன்னும் கேள்விகள் ஆயிரம். ஆனால் சாதி அரசும் சாதி அதிகாரிகளும் உண்மையை ஆழ குழி தோண்டி புதைக்கத்தான் பரபரக்கிறார்கள்.
புதிய பாமரன் போன்ற முற்போக்கு சிந்தனையாளர்களுக்கு கூட விஷ்ணுபிரியா தங்கிலீஷில் தற்கொலை கடிதம் எழுதியிருக்கிறாரே, தமிழ் மறைந்துகொண்டே வருகிறதே என்பதுதான் கவலையாக இருக்கிறதோ என்று எண்ண தோன்றுகிறது. சாதி வளர்ந்து கொண்டே இருக்கிறதே என்ற கவலை பிரதானமான இடத்தில் இப்படியான மொழிப்பற்று கூட முகம்சுளிக்கதான் வைக்கிறது. தமிழ்மீது நீங்கள் கொண்ட அளப்பரிய காதலை காட்ட , சாதியால் படுகொலை செய்யப்பட்ட விஷ்ணுபிரியாவின் கடிதம்தானா கிடைத்தது?

d1

விவாதம் 3 :
தமிழ்தேசியவாதிகள் தமிழர்களின் கடவுள் முப்பாட்டன் முருகன் என சொந்தம் கொண்டாடுகையில் இயேசுவையோ அல்லாவையோ கும்பிடுகிற மக்களெல்லாம் யார்? தமிழர்களா இல்லையா? அவர்கள் தமிழராக அவர்களும் முருகனை வழிபட வேண்டுமா? இல்லை எந்த கடவுளை கும்பிட்டாலும் பெயரோடு தமிழ் என்பதை சேர்த்துக்கொண்டால் போதுமா? ஒருமொழி, ஒரு மதம், ஒரு கடவுள் என்பது தமிழ்தேசியமா, சர்வாதிகாரமா?

மதத்தைக் கொன்று மனிதம் வளர்ப்போம்

மதத்தை கொன்று மனிதம் வளர்ப்போம்!
மாட்டுக்கறி தின்பவனை அடித்துக்
கொல் என்கிறீர்கள்..
அப்படியே கொன்றவனை
ஆஹாவென உச்சி முகர்கிறீர்கள்..
இந்து தேசமெனும்
இட்டு கட்டிய பொய்யை
ரத்தத்தில் நனைத்தெழுதி
வரலாறென்கிறீர்கள்
தீண்டப்படாதவன்
ரத்தத்தை குடிக்க
காவு கேட்கும் காட்டெரிகளை
கடவுளர்கள் என்கிறீர்கள்..
கொல்வதொன்றும்
புதிதில்லை உங்களுக்கு.. கொலை
தொழில் ஒன்றே
நீங்கள் மதம் வளர்க்கும் போக்கு..
அஸ்வமேத ராஜ சூய யாகங்களில்
கொல்லப்பட்டவை யாவும் முஸ்லீம்
குதிரைகளாக இருக்கலாம்.. கிறிஸ்தவ
யானைகளாக இருக்கலாம்.. தீயில்
வென்ற யானை குதிரைகளைக் கண்டு
லட்சுமி பத்ரகாளியாய் பார்த்து
சிரித்திருக்கலாம்..
பசுவில் மட்டுமே இருக்கிறாள்
லட்சுமி - அதன்
மூத்திரம் புனிதம் சாணமும் புனிதம்
முப்பது முக்கோடி தேவர்களும் பசு
மயிரிலும் பங்குபோட்டு வசிக்கிறார்கள்
இத்தனை பேர் இருந்தென்ன லாபம்
இந்த(து) சாமிகளை காக்க ரத்த
வெறியோடு நீங்கள்
அலையத்தான் வேண்டும்..
தன்னை காக்க
துப்பில்லாத சாமிக்கு
தரித்திரவான்கள்
சூலம் ஏந்தி காவு கேட்கிறார்கள்..
மாட்டுக்கறி தின்பவனை
கொன்று புனிதம் காக்கும் உங்கள் கைகளில்
மனித கறி கவுச்சை -
எல்லா சாமிக்கும்
ரொம்ப பிடித்தமோ?
சாதி பேசும் வேதத்தை
சாக்கடையில் போட்டு
சமூக நீதி பேசி மலர்ந்தெங்கள்
சமணமும் பவுத்தமும்..
மதவெறியை
கூர் தீட்டி கழுவேற்றினீர்கள் காற்றில்
இன்னும் கரைந்தபாடில்லை மரண ஓலம்!
சிவனை கும்பிடு.. இல்லையில்லை நீ
விஷ்ணுவை கும்பிடு..
மறுத்தவரெல்லாம் மண்ணுக்குள்
போனார்கள்..
கடைசி ஆசையும்
கேட்கப்படாமல்..
துடித்தவர் ஒலம்
எட்டவுமில்லை
நினைத்தவோர் கடவுள்துணை
கிட்டவுமில்லை
பட்டையும் நாமமும் பக்தனுக்குத் தான்..
சம்பூகனும் நந்தனும் காலம் தோறும்
துள்ள துடிக்க கொல்லப்படுகிறார்கள்
பார்ப்பன தர்மம் காக்க..
அன்பே உருவான கடவுள்கள்
ஆற அமர ரசித்தபடி..
பசு புனிதம் பார்ப்பன புனிதம் ஆறாம் வகுப்பிலேயே
உரக்க சொல்கிறது
ஆரிய திராவிட நாகரிகம்..
ஆறறிவிருந்தும்
தெளிந்தோமில்லை
'அவாளு'க்கு இணையாக
எந்த கடவுளுமில்லை..
ஆரிய நாடென்று ஆர்ப்பரித்தான் பாரதி..
வேதியர் முதலான
நால்வகை குலம் போனால்
வெந்தழியும் பூமியென்று
வேத சாபமிட்டான்..
மாட்டுக்கறி தின்னும் புலையரென்று
மட்டமிகு கவி எழுதி
பார்ப்பன தர்ம
பாடமெடுத்தான் அவன் பசுவுக்காய்
பதைபதைத்தான்..
மகா காவி அவன்
மகா பாவி..
ராமன்கள் சம்பூகன்களை கொல்ல
சூலத்தோடு அலைகிறார்கள்..
தீட்சிதன்கள் நந்தன்களுக்காய்
தீச்சட்டியோடு யாகம் வளர்க்கிறார்கள்..
மகா காவிகள் முண்டாசுக்குள்
ஒளிந்தபடி
மநு தர்மம் பேசுகிறார்கள்..
மதம் பிடித்து மதம் வளர்க்க
மனிதர்களை கொல்பவர்களே.. உங்கள்
நரமாமிச கடவுளர்களுக்கு படைக்க
இன்னும் எஞ்சியிருப்பது
மதம் மட்டும் தான்..
அதை கொல்வோம் நாங்கள்
மனிதம் வளர்க்க...!
- லியோ

தமிழ் பெயர் அரசியல்

தமிழ் பெயர் அரசியல்
தமிழ்நாட்டிலிருக்கிறீர்கள், தமிழ் பெயர் வைக்கலாகாதா என்ற கேள்வியை நண்பர் ஒருவர் எழுப்பினார். மேலோட்டமாக பார்க்கின் இது தமிழ் உணர்வை, தமிழ் மீதான காதலை வலியுறுத்துவதுபோல தெரிந்தாலும் இதன்பின்புலம் யாரை குறிவைக்கிறது என்பதையும் நாம் யோசிக்க வேண்டியிருக்கிறது.
கணபதி, ஸ்கந்தன், நாரயணன், ஹரிஹரன், வெங்கடேஷ்வரன் என வடமொழி சொற்கள் வழங்கும் பெயர்களை பரவலாக இந்துக்கள், குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், பார்ப்பன, முன்னேறிய மற்றும் இடைநிலை சாதி இந்துக்கள் வழங்கிவருகிறார்கள். இப்படியான சமஸ்கிருதம் கலந்த தமிழை இவர்கள் கண்டிக்க மற(று)ப்பதோடு மட்டுமன்றி அப்படியான சமஸ்கிருத கலப்புநடையில் எழுதப்படுகிற பத்திகளை மணிபிரவாள நடை என்று கொண்டாடவும் செய்கிறார்கள்.
எப்படி பெயர்கள் சூட்டப்படவேண்டும் என்பதற்கே மநு விதி வகுத்திருந்தார். அண்ணல் அம்பேத்கர் சுட்டிக்காட்டிய அந்த விதிகளை உங்களோடு பகிர ஆசைப்படுகிறேன்.
" II.31. பிராமணனுடைய பெயரின்
முதல் பகுதி ஏதேனும் மங்களமான
ஒன்றைக் குறிப்பதாக இருக்கட்டும்;
சத்திரியனுடையது சக்தியைக்
குறிப்பதாகவும், வைசியனுடையது
செல்வத்தைக் குறிப்பதாகவும் இருக்க
வேண்டும்; ஆனால்
சூத்திரனுடையது இழிப்புக்குரிய
எதையேனும் குறிப்பதாக
இருக்கவேண்டும்.
II.32. பிராமணனுடைய பெயரின்
இரண்டாம் பகுதி மகிழ்ச்சியைக்
குறிக்கும் சொல்லாகவும்,
சத்திரியனுடையது பாதுகாத்தலைக்
குறிக்கும் சொல்லாகவும்,
சூத்திரனுடையது சேவையைக்
குறிக்கும் சொல்லாகவும் இருக்க
வேண்டும்."
ஒருவனது பெயரைக் கொண்டே அவனது சாதியை அடையாளம் காண முடிகிற ஏற்பாடு இது. அண்ணல் அம்பேத்கர் மேலும் தன் கட்டுரைகளில் குறிப்பிடுவது போல , நீங்கள் யார் என்ற ஒரு இந்துவின் கேள்விக்கு உங்கள் சாதி என்ன என்பதுதான் பொருள். அதற்கான பதிலை பெறும்வரை அவர்களின் அந்த கேள்வி முழுமையடைவதில்லை.
இந்த மநு வகுத்த இந்து சட்டத்தின் படிதான் பெரும்பாலான தாழ்த்தப்பட்ட மக்களின் பெயர்கள் அமாவசை, பாவாடை சாமி, பக்கிரி, மண்ணாங்கட்டி போன்ற இழிவை குறிக்க கூடியனவாக இருந்தன. இந்த சாதி இழிவிலிருந்து தப்பித்து வெளிவரும் முயற்சியாகத்தான் பெரும்பாலான மக்கள் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதங்களுக்கு மாறினார்கள்.
சாதியை அடையாளப்படுத்தும் பெயர்களைவிட தங்கள் மதத்தை அடையாளப்படுத்துகிற பெயர்களை சூட்டிக்கொள்ள விழைந்ததன் பின்னனி பெயர்களின் பின்னிருந்த மநுவின் இந்து சட்ட விதிதான். இயேசுவை கும்பிடுகிற ஒருவர் அந்த மதத்தைச் சார்ந்த பெரியோர்களின் பெயர்களை சூட்டிக்கொள்வதிலும் அல்லாவை கும்பிடுகிற ஒருவர் அந்த மதத்தைச்சார்ந்த பெரியோர்களின் பெயர்களை சூட்டிக்கொள்வதிலும் என்ன பிழையிருக்கிறதென நீங்கள் சொல்கிறீர்கள்?
இஸ்லாமியர்களோ கிறிஸ்தவர்களோ தமிழுக்கு எதிரிகள் அல்ல, தமிழை நீச மொழி என்று பழித்தவர்களும் அல்ல. ஆனால் தமிழை நீசமொழி என்று பழித்த பார்ப்பனர்களிடம், சமஸ்கிருத கலப்பிலேயே தங்களுக்கு பெயர் சூட்டிக்கொள்கிற பார்ப்பனர்களிடம் இவர்களின் தமிழுணர்வு குழைந்து நிற்கிறது. இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவர்களின் தமிழ் பற்று மேல் மட்டும் ராமன் சீதையை சந்தேகப்பட்டது போலவே நடந்துகொள்கிறார்கள்.
அவர்களின் தமிழ் மேலான பற்றை சீமான் ஒருமுறை பேட்டியில் கூறியது போல, பாத்திமா என்பது அந்நிய பெயர், அதனோடு தமிழ் என்பதை சேர்த்து தமிழ் பாத்திமா என்று சொன்னால் தமிழர் அடையாளம் வெளிப்படும் என்ற முட்டாள்தனத்தை ஒத்தது.
பெயர் எந்தளவிற்கு ஒருவருக்கு முக்கியம் என்பதை நாங்கள் அறிவோம். ஜாதி என்பதை சாதி என தமிழ்படுத்துவதோடு உங்கள் தமிழ்பற்று முடிந்துவிடுகிறது. ஆனால் வேலு என்ற அழகிய தமிழ் பெயர் வேலுப்பிள்ளை ஆனது எப்படி என்று எந்த தமிழ் உணர்வாளரும் கேள்வியெழுப்புவதில்லை. ஏனென்றால் தமிழ் உணர்வும் சாதி உணர்வும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்தது.
திராவிட இயக்கங்கள் இப்படியான சாதியொட்டு பெயர்களை அகற்றுவதில் தான் முனைப்பு காட்டின. சாதி பெயர்கள் இழிவை தரக்கூடியன என்ற பிரச்சாரம் வலுவாய் பரப்பப்பட்டது. சாதி அடையாளத்தைவிட மத அடையாளம் எவ்வளவோ மேல்.
முகமது இப்ராஹிம், லியோ ஜோசப் போன்ற பெயர்கள் இவர்களுக்கு அந்நியமாய் பட நிச்சயம் அவை வேற்றுமொழி பெயர்கள் என்பது மட்டுமே காரணமல்ல. அதற்குள் அவர்களின் சாதி மத வெறியும் ஒளிந்திருக்கிறது. அதன்வழி கிறிஸ்தவர், இஸ்லாமியர் என்ற அடையாளம்தான் இவர்களை அந்நியர்களாக காட்டுகிறது. இதுதான் தமிழ் பற்று. தமிழ் வளர்க்க வேறு நல்ல வழி இருந்தால் யோசிக்கலாம்.


சாதி மத அடையாளங்கள் கடந்த இனிய
தமிழ் பெயர்கள் இல்லை என
நினைக்கிறீர்களா???
////
நிச்சயமாக இருக்கவே செய்கின்றன.
ஆனால் இந்த குற்றச்சாட்டு
கிறிஸ்தவர்கள் மற்றும்
இஸ்லாமியர்கள் மேல் மட்டும்
வைக்கப்படுவதை நீங்கள் கவனிக்க
வேண்டும். கணபதி, கணேசன,
ஹரிஹரன், வரதராஜன் இதெல்லாம்
தமிழ் பெயர்களா? ஆனால் இவர்களின்
தமிழ்பற்று இந்த பெயர்களை மாற்ற
சொல்வதில்லை. ஸ்நானம், ஜலம்,
தீர்த்தம், பிரசாதம் முதலியவைகள்
தமிழ் சொல்லா? இங்கும் தமிழ் பற்று
செல்லுபடியாவதில்லை.
இந்துத்துவத்திடமும் பார்ப்பனியத்திட
மும் சரணாகதி ஆகிற தமிழ்பற்று
கிறிஸ்தவ, இஸ்லாமிய பெயர்களை
பார்க்கும்போது மட்டும் பொங்கி
எழுவதன் பின்புலம் என்ன?
இஸ்லாமியர்களிலும்
கிறிஸ்தவர்களிலும் இனிய தமிழ்
பெயர்களை சூட்டும் பல பேரை
சுட்டிக்காட்ட முடியும். ஆனால்
தங்கள் மதத்தை அடையாளப்படுத்தி
க்கொள்வது அவர்கள் உரிமை. அது
எவ்வகையிலும் இழிவுக்குரியது
அன்று. அப்படி மத
அடையாளங்களிலிருந்து முற்றும்
விடுபட்டு தமிழ் பெயர்களைத்தான்
வைக்கவேண்டுமெனில் இந்துக்கள்
எந்த கடவுளர்கள் பெயர்களையும்
அது தூய தமிழாகவே இருந்தாலும்
சூட்டிக்கொள்ளக்கூடாது. இந்துக்கள்
மட்டும் தமிழ் பெயர்கள் என்ற பெயரில்
, மணிப்பிரவாள நடை என்ற
ஜோடனையில் தங்கள் மதத்தை
கடவுளர்களை அடையாளப்படுத்தி
க்கொள்ளலாம், பிற மதத்தினர்
செய்யக்கூடாதெனில் எப்படி?
அதையும் தாண்டி அவர்கள் தமிழ்
பெயர்கள்தான் சூட்ட வேண்டுமெனில்
தமிழார்வலர்களுக்கு ஒரு எளிய
யோசனை. இனிய தமிழ் பெயர்களை
பெற்றிருக்கும் நீங்கள் இஸ்லாமிய,
கிறிஸ்தவ மதத்துக்கு மாறி வேத
சாட்சிகளாய், புனிதர்களாய்
மரித்துப்போனால், தங்கள்
மதத்தின்பொருட்டு உயிரையும்
துறந்தவர் என்ற பேரன்பினால் உங்கள்
அழகிய தமிழ் பெயர்களை தங்கள்
வருங்கால தலைமுறையினருக்க
ு சூட்டி மகிழ்வார்கள். இப்படி
அதிகப்படியான தமிழார்வலர்கள்
இஸ்லாமிய கிறிஸ்தவ
மறைசாட்சிகளாய் மரித்தால்
எங்களுக்கும் அழகிய தமிழ்பெயர்கள்
நிறைய கிடைக்கும். அப்புறமென்ன
எல்லா இடத்திலும் தமிழ் மயம்தான்.
தமிழுக்காய் உயிர்கொடுக்கிற பாக்கியம்
எல்லோருக்கும் கிடைக்குமா என்ன?
இல்லையேல் மத அடையாளத்தை
வெளிப்படுத்துவது அவர்கள் உரிமை
என்ற உணர்வையாவது
வளர்த்துக்கொள்ளுங்கள்.

tamil name

தமிழ் பெயர் அரசியல்
தமிழ்நாட்டிலிருக்கிறீர்கள், தமிழ் பெயர் வைக்கலாகாதா என்ற கேள்வியை நண்பர் ஒருவர் எழுப்பினார். மேலோட்டமாக பார்க்கின் இது தமிழ் உணர்வை, தமிழ் மீதான காதலை வலியுறுத்துவதுபோல தெரிந்தாலும் இதன்பின்புலம் யாரை குறிவைக்கிறது என்பதையும் நாம் யோசிக்க வேண்டியிருக்கிறது.
கணபதி, ஸ்கந்தன், நாரயணன், ஹரிஹரன், வெங்கடேஷ்வரன் என வடமொழி சொற்கள் வழங்கும் பெயர்களை பரவலாக இந்துக்கள், குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், பார்ப்பன, முன்னேறிய மற்றும் இடைநிலை சாதி இந்துக்கள் வழங்கிவருகிறார்கள். இப்படியான சமஸ்கிருதம் கலந்த தமிழை இவர்கள் கண்டிக்க மற(று)ப்பதோடு மட்டுமன்றி அப்படியான சமஸ்கிருத கலப்புநடையில் எழுதப்படுகிற பத்திகளை மணிபிரவாள நடை என்று கொண்டாடவும் செய்கிறார்கள்.
எப்படி பெயர்கள் சூட்டப்படவேண்டும் என்பதற்கே மநு விதி வகுத்திருந்தார். அண்ணல் அம்பேத்கர் சுட்டிக்காட்டிய அந்த விதிகளை உங்களோடு பகிர ஆசைப்படுகிறேன்.
" II.31. பிராமணனுடைய பெயரின்
முதல் பகுதி ஏதேனும் மங்களமான
ஒன்றைக் குறிப்பதாக இருக்கட்டும்;
சத்திரியனுடையது சக்தியைக்
குறிப்பதாகவும், வைசியனுடையது
செல்வத்தைக் குறிப்பதாகவும் இருக்க
வேண்டும்; ஆனால்
சூத்திரனுடையது இழிப்புக்குரிய
எதையேனும் குறிப்பதாக
இருக்கவேண்டும்.
II.32. பிராமணனுடைய பெயரின்
இரண்டாம் பகுதி மகிழ்ச்சியைக்
குறிக்கும் சொல்லாகவும்,
சத்திரியனுடையது பாதுகாத்தலைக்
குறிக்கும் சொல்லாகவும்,
சூத்திரனுடையது சேவையைக்
குறிக்கும் சொல்லாகவும் இருக்க
வேண்டும்."
ஒருவனது பெயரைக் கொண்டே அவனது சாதியை அடையாளம் காண முடிகிற ஏற்பாடு இது. அண்ணல் அம்பேத்கர் மேலும் தன் கட்டுரைகளில் குறிப்பிடுவது போல , நீங்கள் யார் என்ற ஒரு இந்துவின் கேள்விக்கு உங்கள் சாதி என்ன என்பதுதான் பொருள். அதற்கான பதிலை பெறும்வரை அவர்களின் அந்த கேள்வி முழுமையடைவதில்லை.
இந்த மநு வகுத்த இந்து சட்டத்தின் படிதான் பெரும்பாலான தாழ்த்தப்பட்ட மக்களின் பெயர்கள் அமாவசை, பாவாடை சாமி, பக்கிரி, மண்ணாங்கட்டி போன்ற இழிவை குறிக்க கூடியனவாக இருந்தன. இந்த சாதி இழிவிலிருந்து தப்பித்து வெளிவரும் முயற்சியாகத்தான் பெரும்பாலான மக்கள் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதங்களுக்கு மாறினார்கள்.
சாதியை அடையாளப்படுத்தும் பெயர்களைவிட தங்கள் மதத்தை அடையாளப்படுத்துகிற பெயர்களை சூட்டிக்கொள்ள விழைந்ததன் பின்னனி பெயர்களின் பின்னிருந்த மநுவின் இந்து சட்ட விதிதான். இயேசுவை கும்பிடுகிற ஒருவர் அந்த மதத்தைச் சார்ந்த பெரியோர்களின் பெயர்களை சூட்டிக்கொள்வதிலும் அல்லாவை கும்பிடுகிற ஒருவர் அந்த மதத்தைச்சார்ந்த பெரியோர்களின் பெயர்களை சூட்டிக்கொள்வதிலும் என்ன பிழையிருக்கிறதென நீங்கள் சொல்கிறீர்கள்?
இஸ்லாமியர்களோ கிறிஸ்தவர்களோ தமிழுக்கு எதிரிகள் அல்ல, தமிழை நீச மொழி என்று பழித்தவர்களும் அல்ல. ஆனால் தமிழை நீசமொழி என்று பழித்த பார்ப்பனர்களிடம், சமஸ்கிருத கலப்பிலேயே தங்களுக்கு பெயர் சூட்டிக்கொள்கிற பார்ப்பனர்களிடம் இவர்களின் தமிழுணர்வு குழைந்து நிற்கிறது. இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவர்களின் தமிழ் பற்று மேல் மட்டும் ராமன் சீதையை சந்தேகப்பட்டது போலவே நடந்துகொள்கிறார்கள்.
அவர்களின் தமிழ் மேலான பற்றை சீமான் ஒருமுறை பேட்டியில் கூறியது போல, பாத்திமா என்பது அந்நிய பெயர், அதனோடு தமிழ் என்பதை சேர்த்து தமிழ் பாத்திமா என்று சொன்னால் தமிழர் அடையாளம் வெளிப்படும் என்ற முட்டாள்தனத்தை ஒத்தது.
பெயர் எந்தளவிற்கு ஒருவருக்கு முக்கியம் என்பதை நாங்கள் அறிவோம். ஜாதி என்பதை சாதி என தமிழ்படுத்துவதோடு உங்கள் தமிழ்பற்று முடிந்துவிடுகிறது. ஆனால் வேலு என்ற அழகிய தமிழ் பெயர் வேலுப்பிள்ளை ஆனது எப்படி என்று எந்த தமிழ் உணர்வாளரும் கேள்வியெழுப்புவதில்லை. ஏனென்றால் தமிழ் உணர்வும் சாதி உணர்வும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்தது.
திராவிட இயக்கங்கள் இப்படியான சாதியொட்டு பெயர்களை அகற்றுவதில் தான் முனைப்பு காட்டின. சாதி பெயர்கள் இழிவை தரக்கூடியன என்ற பிரச்சாரம் வலுவாய் பரப்பப்பட்டது. சாதி அடையாளத்தைவிட மத அடையாளம் எவ்வளவோ மேல்.
முகமது இப்ராஹிம், லியோ ஜோசப் போன்ற பெயர்கள் இவர்களுக்கு அந்நியமாய் பட நிச்சயம் அவை வேற்றுமொழி பெயர்கள் என்பது மட்டுமே காரணமல்ல. அதற்குள் அவர்களின் சாதி மத வெறியும் ஒளிந்திருக்கிறது. அதன்வழி கிறிஸ்தவர், இஸ்லாமியர் என்ற அடையாளம்தான் இவர்களை அந்நியர்களாக காட்டுகிறது. இதுதான் தமிழ் பற்று. தமிழ் வளர்க்க வேறு நல்ல வழி இருந்தால் யோசிக்கலாம்.

மாட்டிறைச்சியும் மனுச கறியும்

மாட்டிறைச்சியும் மனுச கறியும்
நேற்று புதிய தலைமுறையில் விவாதத்தை பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதிவின் தொடக்கத்திலேயே தமுமுக வைச் சேர்ந்த திரு.ஹாஜா கனி அவர்களுக்கும் எழுத்தாளர் திரு.பெருமாள் மணிகண்டன் அவர்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அந்த விவாதத்தில் பேசிய பாஜகவை சேர்ந்த நபர் இதுவரை நீங்களோ நானோ அறிந்திராத பல புதிய அரிய உண்மைகளை உளறிக்கொட்டினார்... ச்சே.. எடுத்துக்காட்டினார்.
" மாடு வேறு, பசு வேறு, மாடு என்றால் காளையைக் குறிக்கும், பசு எங்கள் கோமாதா. நாங்கள் மாட்டிறைச்சியை எதிர்க்கவில்லை, பசு மாட்டிறைச்சியை தான் எதிர்க்கிறோம். பசு புனிதமா, புனிதமில்லையா என்பதல்ல விவாதம். இந்தியாவில் பசுவதை தடைச்சட்டம் அமலில் உள்ளது. சட்டத்துக்கு விரோதமாக செயல்படுவதை எப்படி ஏற்க முடியும்? மற்ற மதத்தவர்களின் உணர்வுக்கு மதிப்பு கொடுக்கும் வகையில் செயல்பட்டால் எந்த பிரச்சனையுமில்லை"
இப்படியான அறிவாளிகளைவிட்டால் ஊடகங்களில் விவாதிக்க அந்த கட்சிகளில் வேறு யாரும் இல்லை போலும். விலங்குகளில் மாடுகளை மட்டும், இல்லையில்லை, பசுக்களை மட்டும் பாதுகாப்பதில்தான் எங்கள் மத தர்மமிருக்கிறது என்கிறார்கள் காவி டவுசர்கள்.
வேளாண்தொழில் பழகிய திராவிட மக்களுக்கு காளை முக்கிய விலங்காகவும் கால்நடை மேய்த்தலை முக்கிய தொழிலாக கொண்டிருந்த ஆரிய மக்களுக்கு பசு முக்கிய விலங்காகவும் இருந்தது. இந்து சட்டங்களை தொகுத்தளித்த மநு பற்பல குற்றங்களுக்கு தண்டனையாக பார்ப்பனர்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பசுக்களை தானம் செய்யவேண்டும் என்று எழுதி வைத்திருப்பதும் நினைவுகூரத்தக்கது.
இப்படி பார்ப்பனர்களின் முக்கிய விலங்காக விளங்கிய பசு இன்று ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் பொதுவான புனித அடையாளமாக திரித்து கூறப்படுவதை எந்த சாதி இந்துவும் கேள்விக்குள்ளாக்குவதில்லை. பண்டைய காலத்தில் ஆரியர்கள், திராவிடர்கள் உட்பட்ட அனைத்து மக்களுமே மாட்டிறைச்சியை விரும்பி உண்டதாகவே பல நூல்களின் மூலம் தெரிந்துகொள்ளமுடிகிறது.
வேத காலங்களில் தாங்கள் வழிபட்ட இந்திரன், வருணன், அக்கினி, பிரம்மன் முதலான கடவுள்களை புராணகாலச் சூழலில் கைவிட்ட பார்ப்பனர்கள், தங்கள் புது கடவுள்களை அறிமுகம் செய்கிற கதைகளில் மற்றொன்றையும் மறக்காமல் செய்தார்கள். ஏற்கனவே வேத காலத்தில் இருந்த கடவுள்கள் மேல் இழிகதைகளை சுமத்தி அவர்களை புறக்கணிக்க தக்க காரணங்களை படைத்ததே அது. இதன்படியே பிரம்மன் தன் சொந்த மகளுடன் புணர்ந்தவனாகவும் இந்திரன் அகலிகையோடு சல்லாபித்து உடல் முழுக்க ஆயிரம் பெண் குறிகள் தோன்றும்படியாக சாபம் பெற்றதாகவும் இழிகதைகள் புனையப்பட்டன. வேதங்கள் முழுவதுமே இந்திரனையும் அக்கினியையும் படைப்புக் கடவுளான பிரம்மனையும் புகழ்ந்து எழுதிய பாடல்களின் தொகுப்பாக இருக்க, தங்கள் சுயநலத்திற்காக, தங்களது கடவுளர்களை பற்றியே இழிகதைகளை எழுதிவைத்தவர்கள் தான் பார்ப்பனர்கள்.
புராண காலத்துக்கு பிந்தைய சூழலில் இந்து மதத்தின் சாதிய முறையையும் மூட நம்பிக்கைகளையும் உயிர்பலிகளையும் எதிர்த்து இயங்கிய சமண, பவுத்த இயக்கங்கள் கொல்லாமையை பெரிதும் வலியுறுத்தின. இந்து மதத்தின் அளவற்ற அநீதிப்போக்குகளால் நொறுக்கப்பட்டிருந்த மக்களுக்கு சமத்துவத்தையும் மனித உயிர்கள் மீதான பேரன்பையும் வலியுறுத்திய சமண, பவுத்த இயக்கங்களில்பால் பெரும்பான்மையான மக்கள் ஈர்க்கப்பட்ட பார்ப்பன மதத்தை விட்டு வெளியேறத் தொடங்கினர்.
தங்களுக்கு விசுவாசமான அரசர்கள் மூலம் தங்களுக்கு எதிர்ப்பாய் எழுந்த சமணர்கள் மற்றும் பவுத்தர்களை கழுவேற்றி மிரட்டி பார்த்த பார்ப்பனர்களின் அடுத்தகட்ட ராஜதந்திரம் தான் இந்த பசு புனிதமான கதை. சமண மதக்கொள்கையான கொல்லாமையை தங்கள் பார்ப்பன மதத்துக்குள்ளும் புகுத்தினார்கள். பார்ப்பன மதத்தின் நீடித்த நிலைத்த தன்மைக்காக தாங்கள் இதுவரை ஆசைஆசையாக உண்ட மாடு முதலான இறைச்சிகளை கைவிட்டு, இதன் மூலம் மக்கள் பார்ப்பன மதத்திலிருந்து வெளியேறுவதை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். இதன் இன்னொரு பரிமாணமாகத்தான் மாட்டிறைச்சி உண்பவர்கள் கீழ்ஜாதி என்றும் கட்டமைத்தார்கள்.
தங்களுக்கு வேண்டிய போது வேத கடவுள்களை புகழ்ந்து பாடிய பார்ப்பனர்கள் கால நகர்வில் எப்படி அக்கடவுளர்கள் மேல் இழிகதைகளை சுமத்தி தள்ளிவிட்டார்களோ, அப்படியே மாட்டிறைச்சியை விரும்பி உண்ட பார்ப்பனர்கள் சமண இயக்கம் உண்டாக்கிய போட்டியை சமாளிக்க மாட்டிறைச்சி உண்பவர்கள் கீழ்ஜாதி என்ற புனைவையும் கட்டமைத்தார்கள். எக்காலத்திலும் மாறாத இந்து மதம் பார்ப்பனர்கள் விருப்பப்பட்டால், அவர்களின் பொருளாதார நலனுக்கு உகந்ததாக இருக்கும்பட்சத்தில் மட்டும், உடனடியாக மாறிக்கொள்ள தயங்கியதேயில்லை.
இப்படி தங்களின் முக்கிய விலங்காக இருந்த பசுவின் மேல் மட்டும் பெருங்கருணைக்கொண்டு புனிதப்பட்டம் ஏற்றியவர்கள் வேத காலத்தில் தங்கள் விருப்புக்குரியதாய் இருந்து பின்பு தூக்கி எறியப்பட்ட கடவுளர்களின் லட்சுமியையும் முப்பது முக்கோடி தேவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து, உங்களை பார்த்தால் பாவமாயிருக்கிறது, போனால் போகட்டும், நீங்கள் உங்களுக்குள் சண்டை போடாமல் பசுக்களில் வசித்துக்கொள்ளுங்கள், இன்னும் குறிப்பாக இந்திய எல்லையை தாண்டி விடாதீர்கள் என்றபடி நீண்டகால குத்தகைமுறைப்படி பசுவை இந்த கடவுளர்களுக்கு வாடகை விட்டார்கள்.
( டெயில் பீஸ் : தாங்கள் புனிதமாக கருதுகிற லட்சுமி என்ற பெண் கடவுள் பசுக்களில் குடியிருப்பதாக சொல்கிறவர்கள், அந்த லட்சுமி பெண் என்பதை நினைவில் கொண்டாவது எல்லா பசுக்களுக்கும் சட்டை தைத்து வழங்கலாம். அதுவுமல்லாமல் பெண் கடவுள் உள்ளே இருக்கிறார் என்ற கூச்சம் கொஞ்சம்கூட இல்லாமல் பசு மடியிலிருந்து பால் கறக்கிறார்கள். என்ன கொடுமை இது! காவி படையே பொங்கி எழு.. பெண் கடவுளின் மானத்தை, இந்து கலாச்சாரத்தை காக்க உன் நரம்புகள் புடைக்கவில்லையா? )

- லியோ

புதன், 7 அக்டோபர், 2015

thiraavidam 1

திராவிடக் கட்சிகள் தீண்டதகாதோருக்கு செய்தது என்ன? - 1
திராவிடக் கட்சிகளை விமர்சிக்கிறேன் பேர்வழி என பெரியார் மீது சேற்றை வாறி தெளிப்பதல்ல என் நோக்கம் என்பதை பதிவின் முதல்வரியிலேயே தெரிவித்துவிடுகிறேன். பெரியாரை புறக்கணித்து தலித்தியம் பேச முடியாது என்பது மட்டுமல்ல பெரியாரை புறக்கணித்து அரசியல் பேசுகிற எவரும் சுய சாதி பற்றாளராக மிளிரளாமேயொழிய ஒருபோதும் தன்னை தலித்தியவாதியாக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளவும் முடியாது. பெரியாரின் மீது சேற்றைவாறி இறைப்பதென்பது என் மீதே சேற்றை அள்ளி தெளித்துக்கொள்வதொழிய வேறொன்றுமில்லை.
அதே வேளையில் பெரியார் முன்வைத்த திராவிடக் கோட்பாடு தலித்துக்களுக்கான முழுமையான விடுதலையை பெற்றுதரக்கூடியதாக அமைந்திருக்கவில்லை என்பதே என் விமர்சனம். அதை பெரியாரின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளிலிருந்தே தெளிவாக எடுத்தியம்பிட இயலும்.
அடுத்தபடியாக பெரியாரின், அண்ணாவின் வழிவந்தவர்கள் என்பதாக தங்களை பிரகடனப்படுத்திக்கொள்ளும் திராவிடக்கட்சிகள் ஒரு இடைநிலைச்சாதிக்கேயுரிய சாதி மேட்டின்மையோடு பார்ப்பனர்களிடம் பவ்யத்தையும் தனக்கு கீழ்பட்ட சாதி மக்களிடம் அலட்சிய மனப்போக்கையும் ஆதிக்க மனப்பாங்கையும் வெளிக்காட்டியதோடு மட்டுமல்லாமல் தங்கள் கட்சிகளின் ஆட்சிகாலத்தில் தலித் மக்களுக்கு இழைத்த துரோகங்கள் யாவும் வெட்டவெளிச்சமானவை.
ஆனால் இவைகளுக்கு மாற்றாக தனது சுயசாதி பெருமை பேசி, நாங்கள்தான் உண்மையிலேயே பிராமணர்களாக்கும் என்று பார்ப்பனியத்தை தலித்மக்களிலேயே சிலர் உயர்த்திபிடிப்பது சாதியின் நீடித்த தன்மைக்கு மேலும் உரமூட்டுகிற செயலேயன்றி வேறொன்றுமில்லை. பிராமணர்களாயினும் சரி, பள்ளர் பறையர்களானாலும் சரி, யார் பார்ப்பனிய நிலைப்பாட்டை எடுத்தாலும் அது தவறு தான், மக்களை தவறாக வழிநடத்துகிற வரலாற்று பிழைதான்.
திராவிடம், திராவிடக் கோட்பாடுகள், திராவிடத்தின் குறைபாடுகள், திராவிடக்கட்சிகளின் கோட்பாடுகள், திராவிடக்கட்சிகள் தலித் மக்களுக்கு இழைத்த துரோகங்கள், தலித் கட்சிகள் மற்றும் இயக்கங்களின் செயல்பாடுகள் , சுயசாதிப்பற்றும் தலித் மக்களும், பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் இணையும் புள்ளியில் நம் மக்களை ஒன்றிணைப்பது எப்படி? - இவை தான் இந்த பதிவின் நோக்கமும் முடிவும்.
என் புரிதலின் பாதையில் உங்கள் கருத்துகளை மனதார வரவேற்கிறேன்.
தொடரும்...
- LEO JOSEPH D
dleokommedu@gmail.com